மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம். தமிழக அரசு ஒத்துழைக்காததால் தாமதம்.! மத்திய அரசு
டெல்லி: தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் மதுரை - தூத்துக்குடி இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டம், தாமதமாகி வருவதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் கூறியுள்ளார்.
மக்களவையில் இது பற்றி திமுக உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார். வரும் 2021-ம் ஆண்டுக்குள் மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டு விடுமா என கனிமொழி கேட்டார்.

மத்திய அமைச்சர் தனது பதிலில் தீர்க்கப்படாத சில பிரச்சனைகளால் தான் இரட்டை ரயில் பாதை திட்டம் தாமதமாவதாக கூறியுள்ளார். பிரச்சனைகள் என நீங்கள் குறிப்பிடுவது எதை 2021-க்குள், ரூ.1,182 கோடி மதிப்பீட்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை ரூ.382 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு விடுமா என கனிமொழி கேள்வி எழுப்பினார். கனிமொழியின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய ரயில்வே இணை அமைச்சர் சென்ன பசவப்பா, திட்டத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு இன்னும் அளிக்கவில்லை என கூறினார். தமிழக அரசு நிலத்தை ஒப்படைத்த பிறகு திட்டப்பணிகள் துவங்கி விடும் என்றார்.
தமிழகத்தில் உள்ள 5 ரயில்வே அச்சகங்கள் மூடப்படுவதற்கான அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பினார் கனிமொழி. இதற்கு பதிலளித்த அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே டிஜிட்டல் மயமாக்கப்படுவதின் ஒரு பகுதியே அச்சகங்களை மூடும் முடிவு என்ற அவர், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய ராமாநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, காரைக்குடி - அறந்தாங்கி - பட்டுக்கோட்டை இடையே ரயில் சேவை லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் இல்லாததால் நிறுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்த வழித்தடத்தில் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகள் உள்ளதாக குறிப்பிட்டார். ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் போக்குவரத்திற்கு மக்கள் சிரமப்படுவதாக கூறினார். இந்த வழித்தடத்தில் லெவல் கிராசிங்குகளில் பணியாளர்களை அமர்த்தி மீண்டும் ரயில்சேவையை துவக்க கோரிக்கை விடுத்தார்.
பின்னர் பேசிய பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், பெரம்பலூரையும் , திருச்சி, அரியலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றார். இதன் மூலம் வேளாண் விளைபொருட்களை அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு சென்று விற்க விவசாயிகளுக்கு வழி கிடைக்கும் என குறிப்பிட்டார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications