மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம். தமிழக அரசு ஒத்துழைக்காததால் தாமதம்.! மத்திய அரசு
டெல்லி: தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் மதுரை - தூத்துக்குடி இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டம், தாமதமாகி வருவதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் கூறியுள்ளார்.
மக்களவையில் இது பற்றி திமுக உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார். வரும் 2021-ம் ஆண்டுக்குள் மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டு விடுமா என கனிமொழி கேட்டார்.

மத்திய அமைச்சர் தனது பதிலில் தீர்க்கப்படாத சில பிரச்சனைகளால் தான் இரட்டை ரயில் பாதை திட்டம் தாமதமாவதாக கூறியுள்ளார். பிரச்சனைகள் என நீங்கள் குறிப்பிடுவது எதை 2021-க்குள், ரூ.1,182 கோடி மதிப்பீட்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை ரூ.382 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு விடுமா என கனிமொழி கேள்வி எழுப்பினார். கனிமொழியின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய ரயில்வே இணை அமைச்சர் சென்ன பசவப்பா, திட்டத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு இன்னும் அளிக்கவில்லை என கூறினார். தமிழக அரசு நிலத்தை ஒப்படைத்த பிறகு திட்டப்பணிகள் துவங்கி விடும் என்றார்.
தமிழகத்தில் உள்ள 5 ரயில்வே அச்சகங்கள் மூடப்படுவதற்கான அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பினார் கனிமொழி. இதற்கு பதிலளித்த அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே டிஜிட்டல் மயமாக்கப்படுவதின் ஒரு பகுதியே அச்சகங்களை மூடும் முடிவு என்ற அவர், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய ராமாநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, காரைக்குடி - அறந்தாங்கி - பட்டுக்கோட்டை இடையே ரயில் சேவை லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் இல்லாததால் நிறுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்த வழித்தடத்தில் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகள் உள்ளதாக குறிப்பிட்டார். ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் போக்குவரத்திற்கு மக்கள் சிரமப்படுவதாக கூறினார். இந்த வழித்தடத்தில் லெவல் கிராசிங்குகளில் பணியாளர்களை அமர்த்தி மீண்டும் ரயில்சேவையை துவக்க கோரிக்கை விடுத்தார்.
பின்னர் பேசிய பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், பெரம்பலூரையும் , திருச்சி, அரியலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றார். இதன் மூலம் வேளாண் விளைபொருட்களை அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு சென்று விற்க விவசாயிகளுக்கு வழி கிடைக்கும் என குறிப்பிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications