வங்கிகளில் குவிந்த செல்லாத நோட்டுகள் சுமார் ரூ. 5 லட்சத்து 44 ஆயிரம் கோடி?
கடந்த 9 நாட்களில் வங்கிகளில் குவிந்த செல்லாத நோட்டுக்களின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளில் குவிந்திருப்பதாக தகவல் வெளியா
மும்பை: கடந்த 9 நாட்களில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுகள் சுமார் 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி ரூபாய் மதிப்பில் வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகள் கடந்த 8 ம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

பொதுமக்களின் இன்னல்கள்
நாள்தோறும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9 நாட்களில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு வங்கியில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

9 நாட்களில்ரூ 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி
அதாவது, 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட 9 நாட்களில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரூ. 33 ஆயிரத்து 6 கோடி புதிய பணம்
இதில், 33 ஆயிரத்து 6 கோடி ரூபாய் புதிய பணம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.5 லட்சத்து 11 ஆயிரத்து 565 கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதன்பிறகு கடந்த 10-ஆம் தேதியில் இருந்து வங்கிகளில் செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், அவற்றை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யவும் அனுமதிக்கப்பட்டது.

ரூ 1 லட்சத்து 3 ஆயிரத்து 316 கோடி
வங்கி கவுண்டர்களிலும், ஏடிஎம் இயந்திரங்கள் மூலமும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 316 கோடி ரூபாய் பணத்தை மக்கள் எடுத்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications