சாரதா சிட் பண்ட் மோசடி : சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடிக்கு மேல் நிதி திரட்டி மோசடி செய்த சாரதா சிட் பண்ட் நிறுவன மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், ஒடிஷா மாநிலங்களில் ஏராளமான கிளைகளை தொடங்கியது. இந்த நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சுதிப்தா சென் நடத்தி வந்தார்.
இந்நிலையில், இந்நிறுவனத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டன. இதனால் பீதி அடைந்த முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டதால் நிறுவனம் மூடப்பட்டது.
பொதுமக்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை சாரதா சிட்பண்ட் நிறுவனம் மோசடி செய்தது தொடர்பாக மேற்கு வங்காளத்தில் இரண்டு மற்றும் ஒடிசாவில் ஒரு மனு உட்பட மூன்று வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.
இதற்கு முன் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ விசாரிக்க எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று ஒடிசா அரசு தெரிவித்தது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இது மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications