சிறையில் சசிகலாவுக்கு ரூ. 30 தினக்கூலி... காய்கறி வளர்ப்பு, அழகு பொருட்கள் செய்ய ஆர்வம்!
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா காளான், பழங்கள் வளர்ப்பு செய்து தினக்கூலியாக ரூ. 30 பெற்று வருகிறார்.
பெங்களூரு : பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி இருவரும் கன்னடம், கணினி பயிற்சிக்குப் பிறகு காளான், பழங்கள் வளர்ப்பு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு தினக்கூலியாக அவர்களுக்கு ரூ. 30ம் வழங்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017ம் ஆண்டு அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஓராண்டை கழித்துவிட்டனர்.
சிறையில் சசிகலா கன்னடம், கணினி பயிற்சி பெற்று வருகிறார். சசிகலாவோடு இளவரசியும் கன்னடம் பயின்று வருகிறார். இது தவிர காலை மற்றும் மாலை நேரத்தில் தோட்ட வேலைகளிலும் இருவரும் ஈடுபடுகின்றனராம்.

சசிக்கு ரூ. 30 தினக்கூலி
பெண்கள் சிறைப் பகுதியில் காய்கறிகள், பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. சசிகலாவும், இளவரசியும் இந்த தோட்டத்தில் காளான் மற்றும் தர்பூசணி பழங்கள் விளைவித்து வருகின்றனராம். இதற்காக தினக்கூலியாக இவர்களுக்கு ரூ. 30ம் வழங்கப்படுகிறதாம்.

கணினி பயிற்சி மேற்கொள்ளும் சசி
தோட்ட வேலை, கன்னட மற்றும் கணினி பயிற்சிக்குப் பின்னர் வளையல், மணிகள் கோர்ப்பது உள்ளிட்ட அழகுக்கலை பொருட்கள் செய்யும் பணிகளையும் சசிகலா செய்து வருகிறாராம். அழகுக் கலை பொருட்கள் செய்வதில் ஆர்வத்துடன் இருக்கிறாராம் சசிகலா

சாதாரண உடையில் சசிகலா
தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா பெங்களூரு சிறையில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது சசிகலா சாதாரண உடையில் இருந்ததை கண்டு அதிகாரி ஷாக் ஆகியுள்ளார். இதனையடுத்து சசிகலா அறைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளார் அங்கு பையில் கலர் கலர் ஆடைகள் இருந்துள்ளன. இது குறித்து சிறைத்துறையினரிடம் அவர் கேட்ட போது சட்ட விதிகளுக்கு உட்பட்டே சசிகலாவிற்கு சாதாரண ஆடை வழங்கப்படுவதாக கூறியுள்ளனர்.

அதிகாரிக்கு பரிசு கொடுத்த சசிகலா
எனினும் அதிகாரி சோதனையால் எந்த சலனமும் அடையாத சசிகலா தான் செய்த வளையலை மகளிர் ஆணையத் தலைவருக்கு பரிசளித்துள்ளார். இதற்காக அந்த அதிகாரிகள் பணம் கொடுக்க முற்பட்ட போது என்னுடைய பரிசாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் சசிகலா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications