செளதி அரேபியாவில் விலைவாசி உயர்வு: இழப்பீடாக பணம் வழங்குகிறது அரசு
செளதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரிக்கும், எரிபொருள் விலை உயர்வுக்கும் இழப்பீடாக அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக அடுத்த வருடத்திற்கு 260க்கும் அதிகமான டாலர் பணத்தை மாதம் மாதம் வழங்க செளதி அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்,
உள்ளூர் பெட்ரோல் விலையை செளதி அரேபியா இரட்டிப்பாக உயர்த்திருந்தது. அத்துடன் உணவு உட்பட பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், எண்ணெய் சார்ந்துள்ளது நிலையைக் குறைக்க செளதி அரசு விரும்புகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸும் 5% விற்பனை வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- செளதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று முதல் வாட் வரி அமல்!
- சௌதி: எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசு முடிவு
தனியார் சுகாதார மற்றும் கல்வி சேவைகளைப் பயன்படுத்தும் குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு அதற்கான வரியை அரசே செலுத்தும் என்றும் அரச ஆணைக் கூறுகிறது.
எண்ணெய் தவிர தங்களது வருமான ஆதாரங்கள் வளைகுடா நாடுகள் பல்வகைப்படுத்த வேண்டும் எனச் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நீண்ட காலமாக கோரி வருகின்றன.
செளதி அரேபியாவில் 90%த்துக்கும் அதிகமான பட்ஜெட் வருவாய்கள் எண்ணெய் தொழிலில் இருந்து வருகின்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இது கிட்டதட்ட 80%.
2015-ம் ஆண்டு செலவுகளை குறைப்பதற்காகப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் சம்பளங்களைக் குறைத்து செளதி உத்தரவிட்டது.இந்தச் சம்பள குறைப்புகளை செளதி கடந்த ஆண்டு நீக்கியது.
செளதியில் பணியாற்றும் மூன்றில் இரண்டு பங்கினர் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். 2015-ம் ஆண்டு செளதி அரசின் செலவுகளில் 45 % அரசு ஊழியர்களில் சம்பளத்திற்கும், மற்ற படிகளுக்கும் செலவானது, இது பெரும் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
அரசு கருவூலத்தை நிரப்புவதற்காக செளதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
பிற செய்திகள்:
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- உலகின் அனைத்து கைபேசி மற்றும் கணினிகளை பாதித்துள்ள 'சிப்' கோளாறுகள்
- டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தில் உள்ள 11 அதிரடித் தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!














Click it and Unblock the Notifications