எதிஹாட்-க்கு எதிரான வழக்கு: திருத்த மனுவை தாக்கல் செய்ய சு.சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் நிறுவனத்துக்கு கூடுதலாக போக்குவரத்து உரிமங்களை வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதிய திருத்த மனுவைத் தாக்கல் செய்யுமாறு பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நரேஷ் கோயலுக்கு சொந்தமான ஜெட் ஏர்வேஸின் 24% பங்குகளை எமிரேட்ஸின் எதிஹாட் நிறுவனம் வாங்கியது. இதைத் தொடர்ந்து எதிஹாட் நிறுவனத்துக்கு கூடுதல் போக்குவரது உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் இதனால் மத்திய அரசுக்கு ரூ9,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெட் ஏர்வேஸ்- எதிஹாட் நிறுவனங்களுக்கு இடையேயானதாக மட்டும் இதை பார்க்க கூடாது. முதன்மையான பிரச்சனையாக இருக்கும் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குமான போக்குவரத்து உரிமங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்.
ஆகையால் இந்த வழக்கில் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு ஆகியவற்றையும் ஒருதரப்பாக சேர்க்க வேண்டும்.
இதனடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமி புதிய திருத்த மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications