தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை அல்ல என்று கூறிய 1954,1962 தீர்ப்புகள் ரத்து #RightToPrivacy
தனி மனித ரகசியத்தை பாதுகாப்பது என்பது அடிப்படை உரிமை அல்ல என்று 1954, 1962-களில் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
டெல்லி: தனி நபர் ரகசியத்தை பாதுகாப்பது என்பது அடிப்படை உரிமை கிடையாது என்று 1954, 1962-களில் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
சமையல் கேஸ் மானியம், விவசாய பயிர் மானியம், உர மானியம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனால் ஆதார் கார்டை பெற மக்கள் அல்லோகலப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆதார் நடைமுறையில் தனி மனித ரகசியத்தை பாதுகாப்பது என்பது மீறுவதாக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.
அப்போது தனி மனித ரகசியங்களை பாதுகாப்பது அவசியம் என்றும் அது அடிப்படையில் உரிமைகளில் ஒன்று என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். பெரும்பாலானோர் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1954, 1962-ஆம் ஆண்டுகளில் தனி மனித ரகிசய பாதுகாப்பு என்பது அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் அப்போது வழங்கிய தீர்ப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.