ஜாதி, மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தேர்தல்களில் ஜாதி, மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பல ஆண்டுகாலம் நடந்து வந்த இந்துத்துவா வழக்கில் இத்தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தேர்தல்களில் ஜாதி, மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்தது 'இந்துத்துவா வழக்கு'. அதாவது மகாராஷ்டிராவில் முதல் இந்து மாநிலம் ஏற்படுத்தப்படும் என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி பேசியிருந்தார். இதை எதிர்த்து என்.பி.பாட்டீல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்துத்துவா ஆதரவு தீர்ப்பு
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் 1995-ம் ஆண்டு தீர்ப்பளித்தனர். அத்தீர்ப்பில், ‘இந்துத்துவா என்பது மக்களின் வாழ்க்கைமுறை. எனவே, இந்துத்தவா, இந்து கொள்கை என்ற பெயரில் ஓட்டு கேட்பதால் எந்த வேட்பாளருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்பீல்
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. அப்போது 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மாற்றப்பட்டது.

இறுதி தீர்ப்பு
மேலும் தேர்தல்களில் மதத்தை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட பல வழக்குகளும் இதனுடன் சேர்க்கப்பட்டன. இதன் மீதான விசாரணை கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இன்று இறுதித் தீர்ப்பளிக்கப்பட்டது.

சட்டவிரோதம்
அதில், தேர்தல்களில் மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது என்பது சட்டப்படி தவறு. ஜாதி, மதத்தின் பெயரால் வாக்குகளை கேட்பது சட்டவிரோதமானது. தேர்தல் என்பது மதச்சார்பற்றது; ஆகையால் அதில் மதத்தை ஒருபோதும் கலக்கக் கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications