பெங்களூர் டிராபிக் நெரிசலுக்கு முதல்வரும் தப்பவில்லை.. லீவுதானே என்று சொல்லாமல் கிளம்பி சிக்கினார்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் நகரின் டிராபிக் நெரிசல் பிரச்சினை உலக பிரசித்தி. இதன் உச்சமாக, நேற்று, அம்மாநில முதல்வரே நெரிசலில் சிக்கி திணறியுள்ளார்.
மெட்ரோ ரயில், மேம்பாலங்கள் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டாலும், பெங்களூரு நகர மக்கள் தொகையின் ராக்கெட் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.
சாமானியர்கள் மட்டுமின்றி, மாநில முதல்வரான சித்தராமையாவும் நேற்று இதை நேரில் அனுபவித்தார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று விடுமுறை என்பதால் சித்தராமையா, பெங்களூரிலுள்ள காவிரி அரசு இல்லத்தில் ஓய்வெடுத்தார்.

நண்பர் வீடு
அப்போது, அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் தாய் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பெங்களூர் ஆர்.டி.நகரில் வசிக்கும் அந்த நண்பர் வீட்டுக்கு சித்தராமையா காரில் கிளம்பினார். மதியம் 12.30 மணியளவில் காரில் சித்தராமையா புறப்பட்டு சென்றுள்ளார்.

முதலில் தகவல் இல்லை
அவருடன் பாதுகாப்பு போலீஸ் வாகனங்களும் பின்னால் புறப்பட்டு சென்றன. முதல்வர் புறப்பட்ட பின்பு தான், இதுபற்றி மற்ற போலீசாருக்கும், டிராபிக் போலீசாருக்கும், உரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிய சித்தராமையா
இந்த திடீர் பயணத்தால், அவர் செல்லும் சாலைகளில் உடனடியாக பிற வாகனங்களின் போக்குவரத்தை தடுத்து நிறுத்த போலீசாரால் முடியவில்லை. மேக்கரி சர்க்கிள், விமான நிலைய ரோடு வழியாக டி.வி.டவர் ரோட்டில் சித்தராமையா செல்லும்போது, அவரது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

ஊர்ந்து சென்றார்
ஒரு வழியாக அவர் செல்ல வேண்டிய சாலைகளில் போக்குவரத்தை போலீசார் சரி செய்தார்கள். அதன்பிறகு, ஆர்.டி.நகருக்கு சென்ற முதல்வர் சித்தராமையா தனது நண்பரின் தாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார்.

ரம்ஜான் தினமும் டிராபிக்
இருப்பினும் சித்தராமையா தான் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ரம்ஜான் தினம் என்பதால் டிராபிக் நெரிசல் இருக்காது என நினைத்து சித்தராமையா முன் அறிவிப்பின்றி கிளம்பியுள்ளார். ஆனால், ரம்ஜான் தினத்தில் தொழுகையை முடித்துவிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் சாலைகளுக்கு வாகனங்களில் வந்ததால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications