For Daily Alerts
Just In
கர்நாடகா ஆளுநர் நியமனத்தில் மரபை பின்பற்றாத மத்திய அரசு: சித்தராமையா புகார்
பெங்களூர்: கர்நாடகா ஆளுநர் நியமனத்தில் மத்திய அரசு மரபை பின்பற்றவில்லை என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று சித்தராமையா கூறியதாவது:
கர்நாடக ஆளுநராக வஜுபாய் வாலாவை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆளுநர் நியமனத்தில் அந்தந்த மாநில முதல்வர்களின் கருத்தறிவது மரபு.
ஆனால், வஜுபாய் ருதபாய் வாலா நியமனத்தில் மத்திய அரசு என்னிடம் கருத்து கேட்கவில்லை. ஆளுநராக யார் நியமிக்கப்பட்டாலும் அதை வரவேற்போம். ஆனால், மரபைப் பின்பற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Comments
English summary
On the eve of the swearing-in ceremony of veteran BJP leader Vajubhai Rudabhai Vala as Governor of Karnataka on Monday, Chief Minister Siddaramaiah expressed displeasure over the Centre not consulting him before the Governor's appointment
Story first published: Monday, September 1, 2014, 12:08 [IST]