சீனா அங்கிட்டு மிரட்டினா சிலிகுரியிலும் கடும் நெருக்கடி தருவதா? சிக்கிம் முதல்வர் ஆதங்கம்
மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் கூர்க்காலாந்து போராட்டக் குழுவினரால் சிக்கிம் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் கவலை தெரிவித்துள்ளார்.
காங்டாக்: எல்லையில் சீனா மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில் சிலிகுரியில் கூர்க்காலாந்து போராட்டக் குழுவினர் அத்தியாவசியப் பொருட்களை சிக்கிம் கொண்டு செல்ல அனுமதிக்காமல் இருப்பது வருத்தத்தைத் தருகிறது என அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் கூறியுள்ளார்.
சிக்கிம் எல்லைப் பகுதியில் பூடானின் டோக்லாம் பீடபூமி பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. எல்லைப் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சீனா போருக்கான முழு வீச்சில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
கிழக்கு சிக்கிம் பகுதியில் இந்தியா- சீனா எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதேநேரத்தில் அண்டையில் உள்ள டார்ஜிலிங் மலைப் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது.

சிலிகுரியில் சூறை
இதனால் சிலிகுரியில் சிக்கிம் வரும் வாகனங்கள் தடுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. இத்தனைக்கும் கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை சிக்கிம் மக்களும் சிக்கிம் மாநில அரசும் ஆதரிக்கிறது.

எங்கேயும் பாதுகாப்பு இல்லை
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கடிதமும் அனுப்பியுள்ளோம். எல்லையில் மட்டுமல்ல கீழே இருக்கும் சிலிகுரியிலும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.

அனுமதி மறுப்பு
எங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை சிலிகுரியில் அனுப்ப அனுமதிக்க மறுக்கிறார்கள். 22-வது மாநிலமாக இந்தியாவுடன் நாங்கள் இணைந்தோம்.

சான்ட்விச்
அப்படி நாம் இந்தியாவுடன் இணையாமல் போயிருந்தால் சீனாவுக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையே சிக்கி 'சான்விட்ச்' ஆகி இருப்போம். சிக்கிம் மக்கள் எல்லையில் ஊதியம் வாங்காத பாதுகாப்பு படையினராக இருக்கிறோம்.

நீர் ஆதாரம் நாங்களே..
மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கான நிதி நீர் ஆதாரமே சிக்கிம்தான்.. ஆனாலும் சிக்கிமுக்கான நெடுஞ்சாலைகளை முடக்குகிறார்கள். 30 ஆண்டுகளில் கூர்க்காலாந்து போராட்டங்களால் சிக்கிமுக்கு ரூ60,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கூர்க்காலாந்து போராட்டங்களால் சிக்கிம் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு பவன் சாம்லிங் பேசினார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications