கிருஷ்ண ஜெயந்தி விழா – தயிர்ப்பானை உடைக்க சிறுவர்களுக்கு தடை!
மும்பை: கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சிகளில் சிறுவர்களை பங்கேற்க வைக்கும் விழாக் குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை போலீசார் எச்சரித்துள்ளனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

களை கட்டும் கொண்டாட்டம்:
ஆனாலும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போதே கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன.
மனித பிரமிடுகள்:
ஒவ்வொரு வீதியிலும் மனித பிரமிடுகளை உருவாக்கி உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள தயிர் பானைகளை உடைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன.
தயிர் பானை உடைத்தல்:
கடந்தாண்டு நடந்த தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியில் இரண்டு சிறுவர்கள் தவறி விழுந்து இறந்தனர். இதனால் இந்தாண்டு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கு தடை:
இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா, " தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி சிறுவர்களை பங்கேற்க வைக்கும் விழாக் குழுவினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சம்பந்தபட்டவர்களே பொறுப்பு:
ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் சம்பந்தபட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்" என்று அவர் கூறினார். இதற்கிடையே மும்பையில் நேற்று நடந்த தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியில் ஒருவர் இறந்தார்.
மும்பை ஹைகோர்ட் தடை:
இதையடுத்து மும்பை ஹைகோர்ட் "தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தயிர் பானை கட்டக் கூடாது "என உத்தரவிட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications