கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு திட்டம்
பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது.
லக்னோ : பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பசுமாட்டு கோமியம் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, கிருமி நாசினியாகவும், வீடுகளைச் சுத்தப்படுத்தவும் கோமியத்தை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது அங்கு பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, உத்தரபிரதேச மாநிலத்தில் கோமியத்தில் இருந்து எட்டு ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு பல இடங்களில் வரவேற்பு எழுந்துள்ளது.
இதனால் பில்பட் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையம் தான் பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக தயாரிக்க முன் வந்துள்ளது. அங்கு பசுக்களின் கோமியம் சுத்தப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு தயாராக அனுப்பி வைக்கப்படும்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், பசுமாட்டு கோமியம் என்பது பல்வேறு ஆயுர்வேத குணநலன்கள் நிறைந்தது. எனவே, இந்த திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. தினமும் 10 முதல் 20 மில்லி லிட்டர் பசுமாட்டு கோமியம் குடித்தால் பல விதமான நோய்களைத் தடுக்கலாம். இதற்காக விரைவில் பாட்டிலில் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்து உள்ளனர்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications