பிலிப்பைன்ஸ்சை தாக்கியது அதிபயங்கர ‘ஹையான்’ புயல்: ஒருவர் பலி
மணிலா: இன்று, பிலிப்பைன்ஸ் நாட்டை அதிபயங்கரமான புயலான ஹையான் தாக்கியது. அதனைத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக மாறி வருகிறது பிலிப்பைன்ஸ்.
மணிக்கு 235கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் பிலிப்பைன்ஸ் நாட்டை ஹையான் என்று பெயரிடப்பட்டுள்ள அதிபயங்கர புயல் தாக்கியுள்ளது. புயலின் தாக்கத்தால் பெய்து வரும் கனமழையால், அங்கு சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
கனமழை மற்றும் சூறாவளிக் காற்றில் சிக்கி வீடுகள் இடிந்ததில், இடிபாடுகளுக்கிடையே சிக்கி ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகிள்ளது. மேலும், மின்சார சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதி மக்களை வீடுகளை விட்டு வெளியேறச் செய்து பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்தது பிலிப்பைன்ஸ் அரசு. இதனால் அதிக அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப் பட்டது.
புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் சேதாரத்திலிருந்து பிலிப்பைன்ஸ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் வேளையில், தற்போது ஹையான் புயல் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications