எம்.பி., எம்.எல்.ஏ., மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்.. உச்சநீதிமன்றம் அனுமதி
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
டெல்லி : எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், தண்டிக்கப்படவர்கள் தேர்தல்களில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கக் கோரும் பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக ஏன் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இதில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஆறு வார காலம் அவகாசமும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கபடும் என்று என்று மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது.இந்நிலையில், இன்று சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது அதிக குற்ற வழக்குகள் பதிவாகும் தமிழகம் ,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், அவை மார்ச் 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நாடு முழுவதும் 1581 வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது நிலுவையில் உள்ளதாகவும், அவை ஓராண்டிற்குள் விசாரித்து முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
-
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications