பெண் பிறப்புறுப்பு சிதைப்பு மதச்சடங்கிற்கு மத்திய அரசு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
Recommended Video

டெல்லி: பெண்ணுறுப்பு சிதைவு நடைமுறையை நீக்கும் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றமும் ஆதரவு அளித்துள்ளது. மத்திய அரசும் இந்த நடைமுறைக்கு தடை தேவை என்று சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது.
சிறுமியாக உள்ளபோதே பெண் உறுப்பை சிதைக்கும் வழக்கம் சில சமூகங்களில் மதச் சடங்கு என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இது பெண் மீதான வன்முறையாக பார்க்கப்படுகிறது.
ஷியா பிரிவை சேர்ந்த சமூகத்தில் பெண் உறுப்பு சிதைவு நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்த நடைமுறையை அகற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் சுனிதா திகார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மத்திய அரசும் எதிர்ப்பு
இதில் மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டிருந்தது. மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இந்த வழக்கில் ஆஜரானார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கனவில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.

பெண் உறுப்பை தொட உரிமை இல்லை
நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ஒரு பெண்ணின் உடல் உறுப்பை தொடக்கூடிய உரிமையை இவர்களுக்கு ஏன் தர வேண்டும்? மத நடைமுறை என்ற பெயரில் பெண்ணின் உடலை தொட்டு வன்முறைக்கு உள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது என்றார். உறுப்பு சிதைவு என்பது மிகவும் சிறு வயதிலேயே நடைபெறுவதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சிறார் பாலியல் குற்றங்கள் தடைச்சட்டத்தின் (போஸ்கோ) கீழும் இது தவறான செயல் என்று குறிப்பிட்டார்.

பிரமாண பத்திரம்
தற்போது உள்ள சட்டத்தின்படி உறுப்பு சிதைவு செய்வோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும் என்று அட்டார்னி ஜெனரல் கே கே வேணுகோபால் தனது வாதத்தில் குறிப்பிட்டார். இதையே மத்திய அரசு பிரமாணப் பத்திரமாகவும் தாக்கல் செய்துள்ளது.

பல நாடுகளில் தடை
இந்த விஷயத்தில், உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை தரவேண்டும் என்பது மத்திய அரசின் வாதம். அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா மற்றும் 27 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications