பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு.. உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை தொடர்பான வழக்கு விரைந்து முடிக்க பேரறிவாளன் தரப்பில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க இயலாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
டெல்லி: பேரறிவாளன், நளினி ஆகியோரின் அவர்களின் விடுதலையில் தொடர்ந்து சுணக்கம் நிலவி வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.
தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு, அரசியலமைப்பு சட்டம் 161-ன் படி, நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது.

விடுதலை அறிவிப்பு
மேலும் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த விடுதலையை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனால் 7 பேரின் விடுதலை செய்யப்படுவது தடுக்கப்பட்டது.

எதிர்த்து மனு
மேலும், இந்த வழக்கும் நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமலேயே உள்ளது. இதனால் இந்த வழக்கினை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
இந்நிலையில், இந்த வழக்கை உடனே விசாரிக்க இயலாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் 7 பேரின் விடுதலை மீண்டும் தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது.

தவிப்பு
தொடர்ந்து 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி ஆகியோர் தொடர்ந்து விடுதலை தொடர்பாக மனு அளிப்பதும், அதனை மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் மறுதலிப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications