ரொம்ப கேள்விகேட்டா இப்படித்தான்.. காங்கிரஸ் எம்.பியை டிவிட்டரில் பிளாக் செய்த சுஷ்மா சுவராஜ்!
காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வாவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் பிளாக் செய்து இருக்கிறார்.
டெல்லி: காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வாவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் பிளாக் செய்து இருக்கிறார். பிரதாப் சிங் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்ட காரணத்தால் சுஷ்மா சுவராஜ் இப்படி செய்து இருக்கிறார்.
ஆனால் பிரதாப் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் மட்டுமே சுஷ்மா சுவராஜிடம் கேள்விகள் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கே டிவிட்டரில் பிளாக் செய்யும் அளவிற்கு சுஷ்மா சுவராஜ் சென்று விட்டாரா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
அவர் பிளாக் செய்த புகைப்படத்தையும் பிரதாப் சிங் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதேபோல் பாராளுமன்றத்தில் என்ன கேள்வி கேட்டேன் என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

காணாமல் போனவர்கள்
கடந்த 2014ல் ஈராக்கில் 39 இந்தியர்கள் காணாமல் போனார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவர்களை பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்தது. அப்போது அவர்கள் அனைவரும் ஈராக்கின் மொசூல் நகரில் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கு இருக்கு ஜெயிலில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
|
பிரதாப் கேள்வி
இந்த நிலையில் அந்த ஜெயிலும் ஒரு மாதம் முன்பு தரைமட்டமாக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வா பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதில் ''அந்த ஜெயிலும் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. இப்போதாவது அவர்களை கண்டுபிடிக்க முடியுமா என்று கூறுங்கள். அதைவிட்டுவிட்டு லோக் சபாவில் பொய்களை அவிழ்த்து விடாதீர்கள். இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறுங்கள்'' என்று கேட்டார்.

சுஷ்மா பதில்
இதற்கு பதில் அளித்த சுஷ்மா ''அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று இப்போது கூட அறிவிக்க முடியும். அதன்பின் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அப்படி என்னால் சொல்ல முடியாது. அவர்கள் குறித்த தெளிவான செய்திகள் வெளியாகும் முன்பு என்னால் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முடியாது. அது மிகப்பெரிய பாவம்'' என்று கூறினார்.
|
பிளாக் செய்தார்
ஆனால் இந்த பதிலோடு நிற்காமல் சுஷ்மா பிரதாப் சிங்கை பிளாக் செய்துள்ளார். பிரதாப் சிங் தனது டிவிட்டரில் அதை ஷேர் செய்து ''இதுதான் வெளியுறவு துறையை நடத்தும் லட்சணமா. காணாமல் போன 39 இந்தியர்களை பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பிளாக் செய்வார்களா?'' என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications