சதாம் ஆதரவுப் படையை எதிர்கொள்ள ஈராக்குக்கு இந்தியாவும் உதவ வேண்டுமாம்: சொல்வது சு.சுவாமி
டெல்லி: உள்நாட்டுப் போரை எதிர்கொண்டு இருக்கும் ஈராக்குக்கு இந்தியா ராணுவம் மற்றும் நிதி உதவி அளித்து வன்முறையை கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈராக்கில் ஆட்சியில் இருக்கும் அதிபர், பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் அனைவரும் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். அவர்கள் சன்னி முஸ்லிம்களை பழிவாங்கும் வகையிலேயே நடந்து கொள்கின்றனர் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத படைகளின் குற்றச்சாட்டாகும்.
இந்த தீவிரவாத குழுக்கள் பக்கத்து நாடான சிரியாவில் செயல்பட்டு வந்தது. சிரியாவின் ஒரு பகுதியையும் ஈராக்கையும் சேர்ந்து இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்குவது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் திட்டமாகும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் அதிபருக்கு எதிராக உள்நாட்டு போர் வெடித்தது. அதில் அரசு படைகளுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரதிவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் சிரியாவில் அல்ராக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ஏற்கனவே கைப்பற்றி இருந்தனர்.

ஈராக் மீது தாக்குதல்
அதைத்தொடர்ந்து ஈராக்கையும் கைப்பற்றும் நோக்கில் திடீரென தாக்குதல் நடத்தினர். ஈராக்கின் 2-வது தலைநகரமான மொசூல் நகரை முதலில் அவர்கள் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து சதாம்உசேனின் சொந்த ஊரான திக்ரித், மற்றும் பலுஜா ஆகிய நகரையும் கைப்பற்றினார்கள்.
தற்போது தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் முன்னேறி வருகிறார்கள். எந்த நேரத்திலும் பாக்தாத்தை தீவிரவாதிகள் கையில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதவி கோரிய ஈராக்
தலைநகருடன் மற்ற முக்கிய நகரங்களையும் காப்பாற்றும் நோக்கத்துடன் அமெரிக்காவின் உதவியை ஈராக் நாடியுள்ளது. அமெரிக்கா தீவிரவாதிகள் மீது போர் தொடுத்தால் மட்டுமே ஈராக்கை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா கைவிரிப்பு
அமெரிக்கா தலையிட மறுத்துவிட்டால் ஈராக் முழுவதும் தீவிரவாதிகளின் பிடியில் சிக்குவது தவிர்க்க முடியாததாக ஆகி விடும். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போராட ஷியா முஸ்லிம் பிரிவனரும் தயாராகி வருகிறார்கள். எனவே ஈராக் முழுவதும் ரத்த ஆறு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் உதவி
இந்தநிலையில் ஈராக்குக்கு இந்தியா உதவ வேண்டும் என்று சுப்மரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகின் அரசுக்கு ராணுவம் மற்றும் நிதி உதவியை நரேந்திர மோடி அரசு அளித்து ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு பாதிப்பு
மேலும் ஈராக்கில் நடக்கும் போர், இந்தியாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இந்த விவகாரத்தில் இந்திய அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

தொலைநோக்கு அணுகுமுறை
நீண்ட காலமாக தொடர்ந்து வரும் சன்னி - ஷியா பிரிவினரிடையேயான மோதலை, தொலைநோக்கு அணுகுமுறையோடு இந்திய அரசு தடுத்து நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications