கர்நாடகா தண்ணீருக்கு போராடுதாம், தமிழகம் கடலில் விட்டு வீணாக்குதாம்: கர்நாடக சட்டசபையில் கோபம்
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இன்று, சர்வோதய கர்நாடக கட்சி எம்.எல்.ஏவும், கர்நாடக விவசாயிகள் சங்க தலைவருமான புட்டன்னய்யா பேசுகையில், கடந்த 8 வருடங்களாக கர்நாடகாவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆனால் சுமார் ஆயிரம் டிஎம்சிக்கும் மேலான தண்ணீரை தமிழகம் இக்காலகட்டங்களில் கடலில் வீணாக விட்டுள்ளது என்றார்.
காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.

இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், தீர்மானத்தை தாக்கல் செய்து, உறுப்பினர்கள் அதன் மீது விவாதித்து, ஒருமனதாக ஒப்புதல் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் மீது சர்வோதய கர்நாடக கட்சி எம்.எல்.ஏவும், கர்நாடக விவசாயிகள் சங்க தலைவருமான புட்டன்னய்யா பேசுகையில், கடந்த 8 வருடங்களாக கர்நாடகாவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
சுமார் ஆயிரம் டிஎம்சிக்கும் மேலான தண்ணீரை தமிழகம் இக்காலகட்டங்களில் கடலில் வீணாக விட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவுக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 120 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதற்குத்தான் கர்நாடகா போராடுகிறது. ஆனால், கர்நாடகாவுக்கு, சண்டைக்கார மாநிலம் என்று பட்டம் கொடுக்கிறார்கள். தமிழகத்துக்கு பற்றாக்குறை எனும்போது கர்நாடகாவிடம் கேட்கிறது. நமக்கு ஏற்படும் பற்றாக்குறை தண்ணீரை யார் தருவார்கள்?
காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிலும், வீணாகும் நீரை என்ன செய்வது என்று கூறப்படவில்லை. காவிரி விவகாரம் பற்றி கடந்த 25 வருடமாக இரு மாநில முதல்வர்களும் பேசிக்கொள்ளவேயில்லை. இது கூட்டாட்சிக்கு அழகு இல்லை. இவ்வாறு புட்டன்னய்யா தெரிவித்தார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications