பாலியல் வழக்கு.. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை.. கோவா கோர்ட் தீர்ப்பு!
கோவா: பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா மாவட்ட நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் இவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2013-ல் கோவாவில் ஓட்டல் ஒன்றில் சக பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது புகார் வைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சக பெண் பத்திரிகையாளரை லிப்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, பலாத்காரம் செய்ததாக இவர் மீது புகார்வைக்கப்பட்டது .
2013 நவம்பரில் அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவா போலீஸ் தருண் தேஜ்பால் மீது எப்ஐஆர் பதிவு செய்து இவரை கைது செய்தது. பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல், பெண்களை துன்புறுத்துதல் என்று 341, 342, 354, 354-A, 354-B, 376(2)(f) , 376(2) ஆகிய பிரிவுகளின் கீழ் தருண் தேஜ்பால் மீது வழக்கு பதியப்பட்டது.

வழக்கு
தெஹல்கா பத்திரிகை நடத்திய பல ஸ்டிங் ஆப்ரேஷன்கள் காரணமாக தருண் தேஜ்பால் பழிவாங்கப்படுகிறார். இவர் மீது பொய்யான புகார் வைக்கப்படுகிறது என்றும் நிறைய விவாதங்கள் நிலவி வந்தன. தன் மீது விசாரணை நடத்த கூடாது என்று 2014ல் தருண் தேஜ்பால் மும்பை ஹைகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பெயில் அளிக்கப்பட்டது.

விசாரணை
கடந்த 2014 மே மாதத்தில் இருந்து இப்போது வரை தருண் தேஜ்பால் பெயிலில் இருந்தார். இவருக்கு எதிரான வழக்கு கோவா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த புதன் கிழமை விசாரணை முடிந்த நிலையில், இன்று இந்த வழக்கில் கோவா மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி க்ஷமா ஜோஷி தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு
அதில் தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 8 வருடமாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால், பாலியல் வழக்கில் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கருத்து
இது குறித்து பேசிய தருண் தேஜ்பால், 2013ல் என் மீது பொய்யான புகார் வைக்கப்பட்டது.தற்போது நீதிமன்றம் என்னை நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது. உண்மையை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கும், உண்மையின் பக்கம் நின்ற நீதிபதிக்கும் என்னுடைய நன்றி, என்று தருண் தேஜ்பால் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications