இது என்ன சோதனை... குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு... கேரள உள்ளாட்சித் தேர்தல் களேபரம்..!
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை பிடிப்பதாக யார் வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு தான் தங்கள் ஓட்டு என பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் இப்போதே அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் உள்ளூர் மக்களை சுற்றி சுற்றி வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் வயநாடு மாவட்டத்தின் கல்பேட்டாவில் உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு கோரி சென்ற நபர்களிடம் விநோத வாக்குறுதி ஒன்றை அப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
குரங்குகள் செய்யும் அட்டகாசத்தால் கடை நடத்த முடியாமலும் வீடுகளை விட்டு வெளியிடங்களுக்கு செல்ல முடியாமலும் கல்பேட்டா பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். குரங்குகளின் சேட்டையால் நிம்மதி இழந்து தவிக்கும் அவர்கள், குரங்குகளை பிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் வரை பல முறை முறையிட்டும் பலனில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு கோரி சென்ற உள்ளூர் பிரமுகர்களிடம், குரங்குகளை பிடிப்பதாக நீங்கள் வாக்குறுதி தந்தால் நாங்கள் உங்களுக்கு ஓட்டுப் போடுவோம் இல்லையென்றால் நடையை கட்டுங்கள் என அதிரடியாக கூறி வருவதுடன் அதனை தீர்மானமாகவும் நிறைவேற்றியுள்ளனர்.
இதனால் கல்பேட்டா பகுதிக்கு ஆதரவு கோரி வருபவர்கள் சாலை அமைத்து தருகிறோம், குடிநீர் குழாய் இணைப்பு தருகிறோம் என வாக்குறுதிக் கொடுப்பதற்கு பதில் நான் உங்கள் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்கிறேன் என வாக்குறுதி அளித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications