தமிழக விவசாயிகளே... சாகும் வரை உண்ணாவிரதம் இருங்க ! - கட்ஜூ யோசனை
தமிழக விவசாயிகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள், காந்திய வழியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆலோசனை கூறியுள்ளார்.
விவசாய கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையிலேயே படுத்துறங்கி, நாளுக்கொரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

29வதுநாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. நேற்றைய தினம் விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவினர் கிண்டலடித்து பேசுவதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்காக அவ்வப்போது ஆதரவான கருத்துக்களை கூறி ஓய்பு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆதரவு தெரிவிப்பது வழக்கம்.
இதேபோல விவசாயிகளின் போராட்டத்திற்கும் மார்கண்டேய கட்ஜூ ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டார். அவரது பதிவில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு உணர்வுப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
சாகும் வரை உண்ணாவிரதம்
Recommendation 2 Tamilnadu farmers in Delhi: announce Gandhian fast unto death till demands accepted. It is 'amogh astra'. KCR got Telengana
— Markandey Katju (@mkatju) April 10, 2017
இந்த நிலையில் இன்று தனது டுவிட்டர் பதிவில், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு நான் கூறுவது என்னவெனில், காந்தீய வழியில் போராட வேண்டும். சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். தெலுங்கானா கோரி சந்திரசேகர ராவ் இந்த வழியில் போராடியே வெற்றி பெற்றார் என்று கூறியுள்ளார் கட்ஜூ.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications