தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்க... பிரதமர், ஜனாதிபதிக்கு தமிழக விவசாயிகள் மனு
எங்களை சந்தித்து குறைகளை கேளுங்கள் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள் என்று தமிழக விவசாயிகள் பிரதமர், குடியரசுத்தலைவருக்கு மனு அளித்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியை கவரும் வகையில் யோகா செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் குறைகளை கேட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என்று கூறி பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு மனு எழுதி வைத்துள்ளனர்.
காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், நதிகளை இணைத்தல், வங்கி கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

37வது நாளாக போராட்டம் இன்று ஜந்தர் மந்தரில் விவசாயிகள் யோகா செய்து, நூதன போராட்டம் நடத்தினர். சர்வங்காசனம், பத்மாசனம், சூரியநமஸ்காரம் உள்ளிட்ட யோகா செய்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, விவசாயிகள் போராட்டம் பிரதமர் கண்ணுக்கு தெரியாததால் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினோம். அப்போது தெரியவில்லை. நேற்று யாகம் நடத்தினோம். ஆனால் யோகா செய்தால் தான் மோடிக்கு பிடிக்கும் என்பதால் இன்று யோகா செய்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.
தொடர் உண்ணாவிரதம்
டெல்லியில் விவசாயிகள் நாராயணசாமி, பெரியசாமி ஆகியோர் இன்று 13 வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இனியாவது பிரதமர் மோடி விவசாயிகளை திரும்பி பார்ப்பாரா என எதிர்பார்த்துள்ளளோம் என்று கூறியுள்ளார் அய்யாக்கண்ணு
Recommended Video

தற்கொலை செய்து கொள்ள அனுமதி
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் எங்களை சந்தித்து பேசி எங்களின் குறைகளை கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனு எழுதி வைத்துள்ளதாக கூறியுள்ளார் அய்யாக்கண்ணு.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications