தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்க... பிரதமர், ஜனாதிபதிக்கு தமிழக விவசாயிகள் மனு
எங்களை சந்தித்து குறைகளை கேளுங்கள் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள் என்று தமிழக விவசாயிகள் பிரதமர், குடியரசுத்தலைவருக்கு மனு அளித்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியை கவரும் வகையில் யோகா செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் குறைகளை கேட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என்று கூறி பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு மனு எழுதி வைத்துள்ளனர்.
காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், நதிகளை இணைத்தல், வங்கி கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

37வது நாளாக போராட்டம் இன்று ஜந்தர் மந்தரில் விவசாயிகள் யோகா செய்து, நூதன போராட்டம் நடத்தினர். சர்வங்காசனம், பத்மாசனம், சூரியநமஸ்காரம் உள்ளிட்ட யோகா செய்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, விவசாயிகள் போராட்டம் பிரதமர் கண்ணுக்கு தெரியாததால் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினோம். அப்போது தெரியவில்லை. நேற்று யாகம் நடத்தினோம். ஆனால் யோகா செய்தால் தான் மோடிக்கு பிடிக்கும் என்பதால் இன்று யோகா செய்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.
தொடர் உண்ணாவிரதம்
டெல்லியில் விவசாயிகள் நாராயணசாமி, பெரியசாமி ஆகியோர் இன்று 13 வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இனியாவது பிரதமர் மோடி விவசாயிகளை திரும்பி பார்ப்பாரா என எதிர்பார்த்துள்ளளோம் என்று கூறியுள்ளார் அய்யாக்கண்ணு
Recommended Video

தற்கொலை செய்து கொள்ள அனுமதி
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் எங்களை சந்தித்து பேசி எங்களின் குறைகளை கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனு எழுதி வைத்துள்ளதாக கூறியுள்ளார் அய்யாக்கண்ணு.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications