டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு முதல் டோல்கேட்களில் மீண்டும் கட்டணம் வசூல்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: நெடுஞ்சாலை டோல் கேட்களில் டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. இதையடுத்து நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு, பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

இதை தவிர்ப்பதற்காக, சுங்க கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக டிசம்பர் 2ம் தேதிவரை, ரத்து செய்தது மத்திய அரசு. எனவே தற்போது வாகனங்கள் சுங்கம் செலுத்தாமலேயே, வேகமாக பயணிக்க முடிகிறது.
இந்நிலையில், மீண்டும் டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு முதல் வசூலிப்பதாக மத்திய அரசு புதன்கிழமையான இன்று அறிவித்துள்ளது. டோல் கட்டணம் பெறுவதை மத்திய அரசு தள்ளிப்போடும் என நினைத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு இதனால் அதிர்ச்சி.
பணப் புழக்கம் நிலைமை சீரடைந்து விட்டதாக நினைத்து சுங்கக்கட்டணம் வசூலை நெடுஞ்சாலைதுறை தொடங்குகிறது. மேலும், டிசம்பர் 15ம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு சில்லரை போதிய அளவுக்கு டோல்கேட்டுகளில் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. அவ்வாறு கிடைக்காதபட்சத்தில், மீண்டும் நீண்ட கியூவில் நிற்க வேண்டிவரும். எனவே சரியான சில்லரையை கொண்டு செல்லுமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
டோல் கட்டணத்தைத் தவிர்க்க.. இதை மட்டும் பண்ணாதீங்க.. மத்திய அரசின் வார்னிங்.. கவனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications