ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு கோவில் கட்ட திருநங்கைகள் சங்கத்தினர் முடிவு
சந்திரபாபு நாயுடுவிற்குக் கோவில் கட்ட ஆந்திராவின் திருநங்கைகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அமராவதி : ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவைப் பாராட்டி, கோவில் கட்ட திருநங்கைகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன், திருநங்கைகள் நல வாரியம் அமைக்க உத்தரவிட்டார். இதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு, பணி ஏற்பாடுகளை ஏற்படுத்தித் தர முடியும். இது திருநங்கைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இதனால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஆந்திராவில் உள்ள திருநங்கைகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் அமைப்பாளர் விஜயகுமார் கூறுகையில், ' இதுவரை திருநங்கைகளுக்கு எங்கேயும் மரியாதை இருந்தது இல்லை. சந்திரபாபு நாயுடுவால் தான் எங்களுக்கு ஒரு வாழ்வாதாரம் கிடைத்துள்ளது.
இது எங்கள் சமூகத்திற்கு கிடைத்த அங்கீகாரம். இதன் மூலம் எங்களுக்கு இந்த சமூகத்தில் உயர வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அமையவுள்ள இந்த கோவிலில் ஐந்து கிலோ எடையில் சந்திரபாபு நாயுடுவின் வெள்ளி சிலை அமைக்கப்பட உள்ளது. எனது சொத்துகளை விற்றாவது இந்தக் கோவிலைக் கட்டுவேன்' என்று அவர் உறுதி அளித்து இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடுவிற்கு கோவில் கட்டுவது இது முதல்முறை அல்ல. 2015ல், ஆந்திரமாநில தலைநகர் அமைக்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டார் என்று கூறி அமராவதி கிராம மக்கள் அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications