தமிழில் பேச அனுமதி கேட்க வேண்டிருக்கிறதே... லோக்சபாவில் தம்பித்துரை வேதனை
லோக்சபா, ராஜ்யசபாவில் தமிழில் பேச அனுமதி கேட்க வேண்டியிருக்கிறதே என்று எம்.பி தம்பித்துரை வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தமிழில் பேசிய அதிமுக எம்.பி தம்பித்துரைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அவர், தமிழில் பேச அனுமதி பெறவேண்டியிருக்கிறதே என்று ஆதங்கப்பட்டார்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கிய பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடாளுமன்றத்தில் கூட்டு கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தம்பித்துரை, தமிழில் தனது உரையை ஆரம்பித்தார். இந்திய சுதந்திர போராட்டத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பெரும்பாலான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர் என்றார்.
சுதந்திரம் பெருவதற்கான வெள்ளையனே வெளியேறு என்று குரல் எழுப்பிய போது பலரும் பங்கேற்று தங்களின் உயிரை மாய்த்தனர் என்றனர்.
அப்போது பாஜக எம்பிக்கள் குரல் கொடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனும், இது பற்றி நீங்கள் முன்னரே அனுமதி பெறவில்லையே என்றார்.
அதற்கு பதிலளித்த தம்பித்துரையோ, தமிழில் பேச வேண்டும் என்றால் அனுமதி கோர வேண்டிய நிலை உள்ளது என்றும் பிற உறுப்பினர்கள் பேசும் போது இந்தி அல்லது ஆங்கில மொழி பெயர்ப்பையே தமிழக எம்.பி.க்கள் கேட்கும் நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும், தமக்கு மட்டுமல்ல பிற மாநில மொழி பேசுபவர்களும் இதே நிலையைதான் எதிர்கொள்வதாக தம்பிதுரை தெரிவித்தார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் உடனடி மொழி பெயர்ப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுமித்ரா மகாஜன் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications