சொல்லியடித்த மம்தா... மேற்குவங்க இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி
கொல்கத்தா: மேற்குவங்கத்தின் ஒரு மக்களவை மற்றும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி திரிணாமூல் காங்கிரஸ் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது.
மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி, சத்தீஸ்கரின் கைராகர் சட்டப்பேரவைத் தொகுதி, பீகாரின் போசாஹன் சட்டப்பேரவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் உற்று நோக்கப்பட்டன.

மேற்கு வங்க அரசியல்
அதற்கு முக்கிய காரணம் அம்மாநிலத்தில் அரங்கேறிய அண்மைகால அரசியல் நிகழ்வுகள். மேற்குவங்க ஆளுநருக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான மோதல், மேற்கு வங்க அரசுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள், மாநிலங்களில் ஏற்பட்ட குற்றச்செயல்களால் இந்த இடைத் தேர்தல் முடிவுகளை மாநில மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அசான்சோல் மக்களவைத் தொகுதி
இதில், அசான்சோல் மக்களவைத் தொகுதி எம்.பியாக இருந்த பாஜகவை சேர்ந்த பாடகர் பபுல் சுப்ரியோ கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகினார். இதனால் அவரது எம்.பி பதவியும் பறிபோனது. இதனை தொடர்ந்து அசான்சோல் மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

சத்ருகன் சின்ஹா
இதனை தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில், பாஜகவிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து பாஜகவை சேர்ந்த அக்னிமித்ரா பால் போட்டியிட்டார்.

பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி
அதேபோல், மேற்கு வங்க அமைச்சராக இருந்த சுப்ரதா முகர்ஜி கடந்த ஆண்டு காலமானதை தொடர்ந்து அவரது பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜகலிருந்து விலகிய பபுல் சுப்ரியோவை வேட்பாளராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிறுத்தியது.

இரண்டிலும் திரிணாமூல் வெற்றி
இன்று நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில், அசான்சோல் மக்களவைத் தொகுதியில் சத்ருகன் சின்ஹா பாஜக வேட்பாளரை விட 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று பிரமாண்ட வெற்றிபெற்றார்.
அதேபோல் பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பபுல் சுப்ரியோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சாய்ரா ஷா ஹலிமைவிட 20,030 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
-
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications