மமதாவிற்கு நெருக்கடி அதிகமாகிவிட்டது தோல்வி பயத்தில் புகார் சொல்கிறார்கள் - மேற்கு வங்க பாஜக தலைவர்
மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் முதல்கட்டத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறுவது
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டதாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் என்றும் அதனால் தான் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ்கட்சியினர் புகார் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.
ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாழும் , பாஜவுக்குத்தான் வாக்குகள் பதிவாகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளது. காஷிப்பூர் மற்றும் கார்பெட்டா தொகுதிகளில் பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும், மக்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும் அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

முதற்கட்ட வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் காலையிலேயே வந்து வரிசையாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே வாக்காளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மாஸ்க், கையுறை அணிந்தே வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் மாநில போலீசார், பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாமரைக்கு விழும் ஓட்டுகள்
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஈ.வி.எம். மெஷினில் பட்டனை அழுத்தினாலே, பாஜவுக்குத்தான் வாக்குகள் பதிவாகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளது. புருலியா மாவட்டம் காஷிப்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில்(பூத் எண் 6) ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாழும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது என்று வாக்களித்த மக்கள் கூறியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் புகார்
காஷிப்பூர் மற்றும் கார்பெட்டா தொகுதிகளில் பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் மக்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும் அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள். தேர்தல் ஆணையத்திடமும் இது குறித்து புகார் அளிக்கப்பட உள்ளது. உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லயில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.

பாஜக பதிலடி
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக புகார்களை தெரிவிக்கின்றனர் என்றும் திலிப் கோஷ் கூறினார்.

மக்கள் நம்பமாட்டார்கள்
மமதா பானர்ஜி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அதனால் தான் தேர்தல் ஆணையத்திடம் திரிணாமூல் காங்கிரஸ் புகார் அளிக்கிறது. மக்கள் ஆதரவு இல்லாத திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இதுபோன்ற புகார்களை அளிக்கின்றனர். ஆனால் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றும் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications