பெட்ரோல் விலை 200 ரூபாய்க்கு போனால் என்ன செய்ய.. பாஜக தலைவருக்கு வந்த குபீர் யோசனை..ஆடிப்போன மக்கள்
கொல்கத்தா: அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200த் தொட்டால், டூவீலரில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும் என்று அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா அதிரி புதிரி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
Recommended Video
முன்னாள் அமைச்சர் பாபேஷ் கலிடா கடந்த ஜூன் மாதம் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆரம்பமே அசத்தல் என்பதை போல இப்படி ஒரு அரிய கருத்தை அவர் வெளியிட்டு "அசத்திவிட்டார்."
நிகழ்ச்சியொன்றில் பேசியபோது இவ்வாறு பாபேஷ் கலிடா கூறியுள்ளாராம்.

பாஜக தலைவர் யோசனை
அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200ஐ தொட்டால் இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும். இருந்தாலும் அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டும். என்று "இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோரம் யார் சொன்னது.." என்று மக்களே வியந்து கேட்கும் அளவுக்கான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் பாபேஷ் கலிடா.

மக்களுக்கு அவமானம்
அசாம் மாநில காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பாபீடா சர்மா இதைக் கேட்டு தலைசுற்றிப்போய் நிருபர்களை சந்தித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், பாஜக மாநிலத் தலைவர் எந்தக் காரணத்துக்காக இதை சொன்னாரோ தெரியவில்லை. ஆனால், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் பொது மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களின் தீவிரத்தை உணராமல், அவர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதையே அவரது பேச்சு காட்டுகிறது என்று ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.

200 ரூபாய்
மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டி விட்டது. இப்படியே போனால் 200 ரூபாயை தொட்டு விடும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் இப்படி ஒரு கருத்தை பாபேஷ் கலிடா உதிர்த்துள்ளார்.

பயங்கர ஐடியா
அசாம் தலைநகர் குவஹாத்தியில், செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 101.80, டீசல் விலை ரூ. 94.27க்கும் விற்பனையாகிறது. அதற்குள்ளாக இப்படி ஒரு ஐடியா கொடுத்துள்ளார் இவர். ஏற்கனவே 110 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனையாகும் நகரங்களில் இவர் வசித்தால் எந்த மாதிரி ஐடியா கொடுத்து இருப்பாரோ தெரியவில்லை.

குற்றச் செயல்
இருசக்கர வாகனங்கள் இருவருக்கு மட்டும்தான் என்று இந்திய மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது. அதற்கு மேல் பயணம் செய்தால் அது அபராதம் விதிக்கக் கூடிய அளவிற்கு தவறான செயலாகும். மேலும் மூன்று பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒரு இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது அந்த வாகனம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. பிற வாகனங்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. உடலுறுப்பு இழப்பு, உயிரிழப்பு வரை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது இது போன்ற பயணங்கள். ஆனால் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் இஷ்டத்திற்கு இது போன்ற கருத்தை கூறியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
லஞ்ச் பாக்ஸில் மாட்டுக்கறி.. பள்ளிக்கு வந்த மாணவனையும் தாயையும் கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications