சின்னத்திற்கு லஞ்சம்.. 9 மணி நேர விசாரணைக்கு பின்பு இன்றும் நேரில் ஆஜராக தினகரனுக்கு உத்தரவு
நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜராகினார். அவரிடம் 9 மணிநேரமாக துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.
டெல்லி: அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி போலீசார் முன்னிலையில் 3வது நாளாக நேற்றும் ஆஜராகினார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடமிருந்து தனது அணிக்கு பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் பணம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் தினகரன் ஆஜராகினார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. நேற்று முன்தினம் ஆஜரான அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இருப்பினும் நேற்றும் ஆஜராக போலீசார் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜராகினார். அவரிடம் 9 மணி நேரமாக துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினார். இருப்பினும் அவரது பதில் திருப்தி அளிக்காததால் மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு நேரில் ஆஜராக தினகரனுக்கு டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரையும் இன்று ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு பிறகு தினகரன் கைதாவாரா, போலீசார் அவரை விட்டுவிடுவார்களா என்பது தெரியவரும்.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications