10 மாவட்டங்களுடன் தெலுங்கானாவுக்கு ஒப்புதல் அளித்தது கேபினட்!
டெல்லி: ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா புதிய மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அத்துடன் தெலுங்கானாவில், ராயலசீமா பகுதியின் 2 மாவட்டங்களை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது.
டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும், தெலுங்கானா மத்திய அமைச்சர்கள் குழுவின் தலைவருமான சுஷில் குமார் ஷிண்டே, இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அவர் இந்த மசோதாவை ஆந்திரப் பிரதேச சட்டசபையின் பார்வைக்கு அனுப்பி வைப்பார்.

இம் மசோதாவுக்கு ஜனாதிபதிக்கு ஒப்புதல் அளித்த பின்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நடப்பு குளிர் காலக் கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் பங்கேற்றனர்.
அக் கூட்டத்தில் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த அனந்தபூர் மற்றும் கர்னூல் மாவட்டங்களை தெலுங்கானாவில் இணைத்து ராயல தெலுங்கானா என அமைக்கலாம் என்ற மத்திய அமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு புதிய மாவட்டங்களை இணைக்கும் முடிவை கைவிட்டு, 10 மாவட்டங்களுடன் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்கெனவே எடுத்த முடிவே இறுதி செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications