உ.பியில் நிருபரின் தாயார் எரித்துக்கொலை... சி.பி.ஐ. விசாரணை கோரும் மகன்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் காவல் நிலையத்தில் 2 காவலர்களால் ஒரு பெண் எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அவரது மகனும் பத்திரிகையாளருமான சந்தோஷ் வலியுறுத்தி உள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் பெயர் நிது திவேதி என்பதாகும். இவரது மகன் பாரபங்கியிலுள்ள இந்தி நாளிதழில் ரிப்போர்ட்டராக பணிபுரிகிறார் அவரது பெயர் சந்தோஷ் என்பதாகும். கிராமம் ஒன்றில் இரு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக நிருபரின் தந்தை ராம் நரேனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் வீடு திரும்பாததால் அவரது மனைவி அவரை தேடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ரூ.1 லட்சம் லஞ்சம்
அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த ராம் சாகேப் சிங் யாதவ், சப் இன்ஸ்பெக்டர் அகிலேஷ ராய், ஆகியோர் அந்த பெண்ணிடம், கணவரை விடுவிக்க 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். மேலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காவலர்கள் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.
மரண வாக்குமூலம்
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அப்பெண் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் பாராபங்கி மாவட்ட நீதிபதி யோகேஸ்வர் ராம் மிஸ்ராவிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் இந்த தகவல்களை தெரிவித்தார். பின்னர் இன்று காலை அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அகிலேஷ் யாதவ் உத்தரவு
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரண்டு போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அந்த காவலர்களை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
சி.பி.ஐ விசாரணை தேவை
இதையடுத்து இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அவரது மகனும் பத்திரிகையாளருமான சந்தோஷ் வலியுறுத்தி உள்ளார். தன் தாயாரின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொலை வழக்காக பதிவு செய்க
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக முதல்வரை விரைவில் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications