சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தில் 600 பேர் தேர்ச்சி
டெல்லி: மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில், 600க்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெற்றனர்.
இந்திய அரசு நிர்வாகத்தில் மதிப்பு மிக்க பணிகளாகக் கருதப்படும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு குடிமைப் பணித் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, பிரதான எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 602 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
தமிழக அரசு நடத்தும், அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், 225 பேர் எழுதியதில், 60க்கும் மேற்பட்டோர், முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருப்பதாக, மைய வட்டாரம் நேற்று தெரிவித்தது. தமிழகத்தில், 600க்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதியவர்கள் தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் மதிப்பெண் விவரத்தைப் பெற விண்ணப்பிக்க வேண்டாம் என தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2014-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு, மதிப்பெண்கள், கட்-ஆப் மதிப்பெண்கள், விடைக் குறிப்புகள் ஆகியவை தேர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக முடிவடைந்த பிறகே அதாவது தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.
எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட எவ்வகையிலும் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் விவரத்தைக் கோர வேண்டாம். அத்தகைய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள பிரதான எழுத்துத் தேர்வுக்கு விரிவான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications