யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத பார்வையற்ற மாணவர்களுக்கு கூடுதல் நேரம்
டெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) முதன்மைத் தேர்வை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்கிற யு.பி.எஸ்.சி மத்திய அரசு பணிக்கான காலி இடங்களிலை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் 24-ஆம் தேதி ஞாயிறன்று நடைபெற உள்ளது.
அப்போது தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகியவற்றில் தனித்தனியே கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்படும்.
இதன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடங்கள் தேர்வு எழுத கிடைக்கும் என்றும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடையளிக்க வேண்டாம்
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலத் திறனறிதல் தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்க வேண்டாம் என மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நிலைத் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள்கள் தலா இரண்டு மணி நேர கால அவகாசத்துடன் நடத்தப்பட உள்ளது.
மதிப்பிட மாட்டாது
இதில் இரண்டாம் தாளில் ஆங்கில திறனறிதல் தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியதில்லை என்றும், அது மதிப்பிடப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மதிப்பெண்கள்
தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்படும் போது, முதல் தாளில் 200 மதிப்பெண்களும், இரண்டாம் தாளில் ஆங்கில திறனறிதல் தொடர்பான பகுதிக்கான மதிப்பெண்களை கழித்த பின் மீதமுள்ள மதிப்பெண்களும் பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications