உ.பி.யில் மரித்துப் போன மனிதநேயம்.. மனைவியின் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற முதியவர்!
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் இன்னும் என்னென்ன அவலங்களை காண காத்திருக்கிறதோ தெரியவில்லை. என்னத்த சொல்ல!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை, ஜீரணிக்க முடியாத துயரங்களை பரிசளித்துக் கொண்டிருக்கிறது. சாமானியன் முதல் பிரபலங்கள் வரை எவரையும் விட்டுவைக்காமல் காவு வாங்குகிறது.
ஆந்திராசாவில் ஆக்சிஜன் வைத்த அறை மருத்துவமனையில் கிடைக்காமல், ஒன்றரை வயது குழந்தை ஒன்று ஆம்புலன்ஸிலேயே 2 மணி நேரம் இருந்து இன்று உயிரை விட்டிருக்கிறது.

கொரோனா மரணம்
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள ஜவுன்பூர் பகுதியில் நிகழ்ந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த திலக்தாரி சிங் என்பவரது மனைவி ராஜகுமாரி சிங் (55) கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டார்.

சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்
இதனால் மனவேதனை அடைந்த திலக்தாரி, மனைவியின் உடலை சைக்கிளின் முன் பக்கத்தில் சாக்கு மூட்டையை போல வைத்து இங்கும் அங்கும் அலைய, இந்த தகவல் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், மூட்டை போல சைக்கிளில் அலங்கோலமாய் வைக்கப்பட்டிருந்த உடலை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அலங்கோலமாய்
இதனால் மனவேதனை அடைந்த திலக்தாரி, மனைவியின் உடலை சைக்கிளின் முன் பக்கத்தில் சாக்கு மூட்டையை போல வைத்து இங்கும் அங்கும் அலைய, இந்த தகவல் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், மூட்டை போல சைக்கிள் அலங்கோலமாய் வைக்கப்பட்டிருந்த உடலை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடல் தகனம்
இதுகுறித்து ஜவுன்பூர் போலீசார் ட்விட்டர் பக்கத்தில், " இந்த சம்பவம் குறித்து 26.04.2021 அன்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பணியில் இருந்த காவலர்கள், சம்பவ இடத்தை அடைந்து, உடலை மீட்டு பிறகு முறையாக தகனம் செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications