ராஜிவ் காந்தியின் சர்ச்சை கருத்தை ட்விட்டரில் போட்டு பஞ்சாயத்தில் சிக்கிய மே.வ. காங்.
கொல்கத்தா: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்தை அவரது பிறந்த நாளன்று ட்விட்டரில் பகிர்ந்து பஞ்சாயத்தில் சிக்கியுள்ளது மேற்கு வங்க காங்கிரஸ்.
ராஜிவ் காந்தியின் 72-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடம் அமைந்துள்ள வீர பூமியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், அந்தந்த மாநிலங்களிலும் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளால் ராஜிவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராஜிவ்காந்தி கூறிய சர்ச்சை கருத்து பதிவிடப்பட்டது.
அதாவது இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, ஒரு பெரிய ஆலமரம் விழும்போது நிலம் அதிரவே செய்யும் என கூறி சீக்கியர் படுகொலையை நியாயப்படுத்தியிருந்தார் ராஜிவ் காந்தி. வரலாற்றுப் பக்கங்களில் இன்றளவும் சர்ச்சைக்குரிய கருத்தாக இது இருந்து வருகிறது.
இந்த சர்ச்சை கருத்தை ராஜிவ் பிறந்த தினத்தையொட்டி மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனே இந்த கருத்து நீக்கப்பட்டுவிட்டது.
தங்கள் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் இப்படி ஒரு கருத்து பதிவாகிவிட்டதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது மேற்கு வங்க காங்கிரஸ்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications