நேரு, இந்திரா, ராஜீவ் காலத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி இல்லையே: வெங்கையா நாயுடு
ஹைதராபாத்: சபையை எப்படி நடத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
லோக்சபாவின் எதிர்கட்சி தலைவர் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இல்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்ல அது ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நேருஜி, இந்திரா காந்தி காலத்தில் எதிர்கட்சி தலைவர் இல்லை. ஏன் ராஜீவ் காந்தி காலத்திலும் எதிர்கட்சி தலைவர் இல்லை. ஆனால் பாஜக ஆட்சியில் எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். அப்போது நிலைமை வேறு தற்போது நிலைமை வேறு. சபாநாயகரின் முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அவர் என்ன முடிவு செய்கிறார் என்று பார்ப்போம் என்றார்.
எதிர்கட்சி தலைவர் பதவியை தராவிட்டால் நாடாளுமன்றம் நடக்காது என்று காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது தெரிவித்துள்ளது பற்றி கேட்டதற்கு நாயுடு கூறுகையில்,
அதையும் பார்ப்போம். சபையை எப்படி நடத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அவர்களால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படுதோல்வி அடைந்த பிறகும் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காங்கிரஸ் மற்றும் அனைவரும் சேர்ந்து நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்தி மக்களின் நன்மைக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தேவையானவற்றை செய்ய வேண்டும் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications