வெளியான லேட்டஸ்ட் சர்வே.. புது குழப்பம்.. மேற்கு வங்கத்தில் வெல்லப்போவது மம்தா பானர்ஜியா, பாஜகவா?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாங்கள் ஓட்டுப் போட விரும்புவது திரிணாமுல் காங்கிரசுக்குத்தான், ஆனால் வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி பாஜக என மக்கள் கருத்துக் கணிப்பில் சொல்லி குழப்பியுள்ளனர்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சிபிஎன்எக்ஸ் உடன் இணைந்து ஏபிபி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளுமே கடுமையான போட்டியை ஒருவருக்கொருவர் தர உள்ளதை இந்த சர்வே உறுதி செய்துள்ளது.

நிலைமை மாறுகிறதா
முந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் எளிதாக வீழ்த்தும், அதே நேரம் பாஜக ஓரளவுக்கு அதிக சீட்களை வெல்லும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை வேறு மாதிரி மாறியுள்ளது.

வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி
மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று சர்வேயில் மக்களிடம் கேட்கப்பட்டபோது, மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்பில் பங்கேற்ற 43.61% மக்கள் பாஜக ஆட்சிக்கு வர முடியும் என்று தெரிவித்துள்ளனர். திரிணாமுல் 42.05% ஆதரவை பெற்றது.

இடதுசாரிகள்
அதாவது வாக்கு சதவீதம் அடிப்படையில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டணிக்கு வெறும், 6.74 சதவீதம் ஓட்டுக்கள்தான். சொல்ல முடியாது, சொல்ல தெரியாது என கூறிய மக்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக உள்ளது. 7.60 சதவீதம் பேர் இந்த பதிலை கூறியுள்ளனர்.

மாறுபட்ட ஓட்டு
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று அதே நபர்களிடம் கேட்கப்பட்டபோது, டி.எம்.சிக்கு 40.07% ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்தா பானர்ஜிக்காக வாக்களிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். 37.75% பேர் பாஜகவுக்கு ஓட்டு போடுவோம் என்று கூறியுள்ளனர்.

குழப்பம்
அதாவது வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி பாஜக என அதிகம் பேரும், தாங்கள் ஓட்டுப்போடப்போவது திரிணாமுல் காங்கிரசுக்கும் என்று கூறியுள்ளனர் மக்கள். இந்த குழப்பத்தால் மம்தா பானர்ஜி குழம்பிப் போயுள்ளார். பாஜக எந்த முறைகேட்டிலும் ஈடுபடாமல் 8 கட்ட தேர்தல்களையும் கடந்துவிட வேண்டும் என்று தொண்டர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார். கருத்துக் கணிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் வேலையை பாருங்கள் என அவர் கூறியுள்ளார்.
-
பாஜக இல்லாத சட்டமன்றம்.. 5வது சக்தியாக பரகல பிரபாகர் முன்னெடுக்கும் புதிய அரசியல் அலை.. பின்னணி என்ன -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications