உங்க வேலைய மட்டும் பாருங்க! நெருப்போடு விளையாட வேண்டாம்! அமித் ஷாவுக்கு ஆவேச பதிலளித்த மம்தா பானர்ஜி
கொல்கத்தா : குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு ஆவேசமாக பதிலளித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2024ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும், சிஏஏ அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தம் சட்டம் பற்றி வதந்திகளை பரப்பியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்ததோடு, கொரோனா முடிந்ததும் மத்திய அரசு சிஏஏ சட்டத்தை செயல்படுத்தும் என்று கூறினார்.
உஷார்.. தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. 4 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை இருக்கு
இந்நிலையில் எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) தேவையில்லாமல் கேவலமான அரசியலுக்கு அமித் ஷா பயன்படுத்துவதாகவும், பிஎஸ் எஃப் அமித்ஷாவின் வலையில் விழக்கூடாது என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜி
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, " மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவின் கூட்டாளிகள் எனவும், அவர்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என விரும்புகிறார்கள், சமூகங்களைப் பிரிக்க விரும்புகிறார்கள். நாட்டின் உள்துறை அமைச்சர் அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயை தவறாக பயன்படுத்துகிறார், மேலும் அவர் டெல்லி பலத்தை வங்காளத்தில் காட்ட முயல்கிறார்" என குற்றம் சாட்டினார்.
குடியுரிமை திருத்த சட்ட மசோதா
குடியுரிமை திருத்த சட்ட மசோதா காலாவதியானது என்ற மம்தா, அவர்கள் சிஏஏ பற்றி பேசுகிறார்கள். அப்போது பிரதமர் மற்றும் முதல்வர்களை தேர்ந்தெடுத்தவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லவா? CAA மசோதா காலாவதியானது. அவர்கள் ஏன் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரவில்லை? குடிமக்களின் உரிமைகள் தடுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையே நமது பலம்," என்று அவர் மேலும் கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பணியை மட்டும் கவனிக்க வேண்டும் எனவும், BSFஇன் வேலையில் தலையிட வேண்டாம் என்றும் எச்சரித்த மம்தா, அமித் ஷா ! மத்திய உள்துறை அமைச்சராக உங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் என்ன செய்வது என்று எனக்குக் கற்றுக் கொடுக்க வேண்டாம். மாநிலத்தை ஆட்சி செய்ய BSF-ஐக் கேட்காதீர்கள். நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசத்தின் எல்லைகளைக் காப்பது உங்கள் வேலை. மாடு கடத்தல் மற்றும் ஊடுருவலை நிறுத்துங்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்" என்று பானர்ஜி கூறினார்.
ம்ம்தா நம்பிக்கை
CAA குறித்த ஊடகங்களின் கேள்விக்கு மேலும் பதிலளித்த பானர்ஜி, 2024 இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும் CAA செயல்படுத்தப்படாது என்றும் நம்பிக்கை தெரிவித்தார். "2024ல் அவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று நான் கூறுகிறேன். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) மற்றும் CAA எதுவும் நடக்காது. அவர் மறைக்க வேண்டும். ஒரு வருடம் கழித்து அவர் மேற்கு வங்கத்துக்கு வந்தார். உள்துறை அமைச்சராக இருந்து ED, CBI உடன் செயல்பட்டு வங்காளத்தை கொளுத்த முயற்சிக்கிறார்கள்." என்றார்.