நான் தாவூத் இப்ராஹிமை சந்தித்தபோது...: டெரர் பேட்டியை நினைவுகூர்ந்த பத்திரிக்கையாளர்
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருப்பார் என பல ஆண்டுகளுக்கு முன்பு அவரை சந்தித்து பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர் ஜாய் சி. ரபேல் தெரிவித்துள்ளார்.
1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் ஷபிர் இப்ராஹிம் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஷபிரை தாவூதின் நண்பர்களாக இருந்து எதிரிகளான அமிர்சாதா மற்றும் ஆலம்செப் ஆள் வைத்து கொலை செய்தனர்.

இந்த கொலை நடந்த 2வது நாள் கரண்ட் என்ற வாரப் பத்திரிக்கையின் ஆசிரியர் பத்திரிக்கையாளர் ஜாய் சி. ரபேலை அழைத்து தாவூதை பேட்டி கண்டு செய்தி வெளியிடுமாறு கூற அவரும் செய்துள்ளார். தாவூதை சந்தித்தது குறித்து ஜாய் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
தாவூத் மிகவும் சாதாரணமாக இருந்தார். அவர் எதிரணியினரை மிரட்டி எனக்கு பேட்டி அளிக்கவில்லை. மாறாக நடந்த சம்பவம் குறித்து பொறுமையாக விளக்கினார். நிறைய பேசினார். ஆனால் சிரிக்கவில்லை. நான் தாவூதை சந்தித்தபோது அவர் தாதாவாக மட்டுமே இருந்தார்.

அவர் எதிர்காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் விரோதியாவார் என நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. தனது சகோதரரை கொன்றவர்கள் தனது பழைய நண்பர்கள் என்று கூறி அவர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை என்னிடம் அளித்தார்.
செய்தியை பிரசுரிக்கும் முன்பு தன்னிடம் காட்டுமாறு கூறினார். நானும் அவரது வீட்டிற்கு சென்று செய்தியை அளித்தேன். அவரது ஆள் ஒருவர் படித்துவிட்டு பிரசுரிக்கலாம் என்றார். இதையடுத்து கதையை பத்திரிக்கை ஆசிரியர் ஏற்றுக் கொண்டாரா என தாவூத் கேட்டதற்கு இன்னும் இல்லை என்றேன்.
உடனே அவர் ஒரு டாக்சியை பிடித்து என்னுடன் அவரது ஆட்கள் இருவரை அனுப்பினார். தாவூத் பற்றி செய்தி பிரசுரிக்க அனுமதிக்கப்படும் வரை அவர்களை அலுவலகத்தில் இருக்குமாறு உத்தரவு. செய்தி ஒருவகையாக பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே எனக்கு நிம்மதியாக இருந்தது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications