குஜராத்திற்கு ஏன் இரு கட்ட தேர்தல்?
டெல்லி: குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்துள்ளார்.
மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளே உள்ள குஜராத் சட்டசபைக்கு ஏன் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்ற வியப்பு ஏற்படுகிறது. 2012ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போதும் குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இரு கட்ட தேர்தல்களுக்கு நடுவேயும் 4 நாட்கள் இடைவெளி விடப்பட்டது. அதேநேரம், 234 தொகுதிகளை கொண்ட தமிழகம், 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்களில் ஒரே கட்டமாகத்தான் தேர்தல்கள் நடந்துள்ளன. இத்தனைக்கும் கர்நாடகாவின் சில பகுதிகளில் நக்சலைட்டுகள் பிரச்சினையும் உண்டு.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவே ஆளும் நிலையிலும், ஒப்பீட்டளவில் குட்டி மாநிலமான குஜராத்திற்கு 2 கட்ட தேர்தல் இப்போது தேவையா, அந்த அளவுக்கு தேர்தலை சீர்குலைக்க வன்முறையாளர்கள் உள்ளனரா என்ற கேள்வி பொதுவான வாக்காளர்களிடம் எழுகிறது. சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் தென் மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதையே இது காட்டுகிறது.
குஜராத்தில் ஏன் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்ற கேள்விக்கு, தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி கூறுகையில், குஜராத்தில் மிக நீண்ட கடற்கரை உள்ளது. பாலைவனம் உள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த தேவை உள்ளது. இமாச்சல பிரதேசம் மலைப்பகுதியாக உள்ளதால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துகிறோம். நில அமைப்புதான் இரு கட்ட தேர்தலுக்கு காரணம் என்றார் அவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications