குஜராத் ராணுவ வீரர்கள் மட்டும் எல்லையில் வீர மரணம் அடைவதில்லையே எப்படி? அகிலேஷ் யாதவ் கேள்வி
டெல்லி: குஜராத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மட்டும் வீர மரணமடைவதில்லையே ஏன் என்ற உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் கமெண்ட், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் இந்திய ராணுவத்தைசேர்ந்த உர் பயாஸ், தீவிரவாதிகளால் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கேள்வியை அகிலேஷ் யாதவ் எழுப்பியுள்ளார்.
மாநிலம், வட்டாரம் என்ற அளவில் ராணுவ வீரர்கள் தியாகத்தை அகிலேஷ் யாதவ் கொச்சைப்படுத்திவிட்டார் என்று வட இந்திய நெட்டிசன்கள் காரசாரமாக கருத்து கூறி வருகிறார்கள்.

தென் இந்தியா
"உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தென் இந்தியா மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் எல்லையில் வீரமரணமடையும் செய்திகள் வருகின்றன. ஏன் குஜராத்தை சேர்ந்த எந்த ஒரு ராணுவ வீரரும் வீரமரணமடையவில்லை?" என்று அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.

விமர்சனங்கள்
அகிலேஷ்யாதவ், மோடியை சீண்டுவதாக நினைத்து இக்கேள்வியை எழுப்பியிருந்தார். ஆனால் அது இப்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. இணையதளங்களில் அகிலேஷ் யாதவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஏன் என்ற கேள்வி
அகிலேஷ் யாதவ் கூற வந்ததை சரியாக கூறாமல் கூறியதால் அது சர்ச்சைக்குள்ளாகியதாக சமாஜ்வாதி கட்சியினர் கூறிவருகிறார்கள். சிலரோ, குஜராத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மட்டும் ஏன் எல்லையில் பணியமர்த்தப்படவில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

நீட் தேர்வில் அராஜகம்
நீட் பொது நுழைவுத் தேர்வின்போது, குஜராத்தில் மட்டும் எளிதான கேள்விகள் கேட்கப்பட்டதாக சர்ச்சை வெளியாகியுள்ள நிலையில், அகிலேஷ் யாதவின் கேள்வி வேறு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பது இதில் கவனிக்ககத்தக்கதாகும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications