செல்போன் வாய்ஸ் ரெக்கார்டரை வைத்து, கணவனின் காமலீலைகளை அம்பலப்படுத்திய மனைவி!
பெங்களூர்: கணவனுக்கு தெரியாமல் அவரது செல்போனில் கால் வாய்ஸ் ரெக்கார்ட் சேவையை ஆக்டிவ் செய்து, அவரின் செக்ஸ் லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளார் பெங்களூரை சேர்ந்த பெண்மணி.
பெங்களூரிலுள்ள கன்ட்ரி வெகேஷன்ஸ் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தில் பொது மேலாளர் பணியில் இருப்பவர் ஹரி கிருஷ்ணா (31). இவரது மனைவி கலா (28). இருவரும் 10 வருடங்கள் முன்பு காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஓடி சென்று திருமணம் முடித்துள்ளனர்.

ஜொள் மன்னன்
இந்நிலையில் சமீபகாலமாக கணவரின் நடவடிக்கையில் கலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிலும், பெண்கள் விவகாரத்தில் கணவர் ரொம்ப வீக்காக உள்ளார் என்ற சந்தேகம் கலாவுக்கு எட்டிப் பார்த்துள்ளது. இதை உறுதி செய்ய ஒரு மாஸ்டர் பிளான் போட்டார் கலா.

செல்போனில் சிக்கல்
ஹரி கிருஷ்ணன் பயன்படுத்தும், செல்போனில், வாய்ஸ் கால் ரெக்கார்டரை டவுன்லோடு செய்து, அதை ஆன் செய்து வைத்துவிட்டார். கால் ரெக்கார்டர் வேலை செய்வது தெரியாமல், ஹரி கிருஷ்ணன் வழக்கம்போல தனது செல்போனை பயன்படுத்தியுள்ளார்.

செல்போனில் பதிவு
சில நாட்கள் கழித்து, ஹரிகிருஷ்ணன் போனை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்றிருந்த நிலையில், கலா, அந்த போனில் பதிவான வாய்ஸ் ரெக்கார்டுகளை போட்டு கேட்டுள்ளார். அப்போதுதான் அவரது கணவரின் சுய ரூபம் முழுமையாக கலாவுக்கு தெரியவந்துள்ளது.

ஆபாச பேச்சுக்கள்
'நீ ஒரு குழந்தைக்கு தாயா இருந்தாலும், செக்சியாவும், இளமையாவும் இருக்கியே', 'என் கேபினுக்கு வா, செக்ஸ் வைத்துக்கோள்வோம்', 'நான் உன்னை எப்போதும் மகிழ்ச்சியா வைத்துக் கொள்கிறேன்'. 'நீ என் கூட ".....", இல்லைன்னா செத்துடுவேன் போல இருக்கு'. இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் ஹரி கிருஷ்ணன் பேசியுள்ளதை கலா அறிந்து அதிர்ச்சியானார்.

பேஸ்புக் சாட்டிங்
கணவனின் கொடுமைகளில் இருந்து பெண்களை காப்பாற்றுவது எப்படி என்று யோசித்த கலா ஒரு ஐடியா செய்தார். கணவன் பேசிய சில பெண்களை தொடர்பு கொண்டு, இதுகுறித்து புகார் அளிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால், அப்பெண்கள் தயங்கினர். இருப்பினும் கலா விடவில்லை. திவ்யா என்ற பெண்ணின் கணவரை பேஸ்புக் மூலம் அறிந்து கொண்டு அவருடன் சாட்டிங் செய்து, அவரின் தொலைபேசி நம்பரை வாங்கி நடந்த சம்பவங்களை சொல்லியுள்ளார்.

போலீசில் புகார்
சாப்ட்வேர் இன்ஜினியராக துபாயில் வேலை பார்க்கும் திவ்யாவின் கணவன், உடனடியாக மனைவிக்கு போன் செய்து விவரம் கேட்டுள்ளார். அப்போது, திவ்யா நடந்தவற்றை ஒப்புக்கொண்டார். தனது போனசை கட் செய்துவிடுவதாகவும், வேலையைவிட்டு தூக்கிவிடுவதாகவும், ஹரிகிருஷ்ணன் மிரட்டியதால் வெளியே சொல்லாமல் அவர் பேசிய ஆபாச வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்ததாக திவ்யா தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து பெங்களூர் வந்த திவ்யாவின் கணவர், மைக்கோ லேஅவுட் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

பிற பெண்கள் அச்சம்
இதுகுறித்து அவர் கூறுகையில், சில நாட்கள் பெங்களூரில் இருந்து வேலை பார்க்க அலுவலகத்தில் அனுமதி பெற்று வந்துள்ளேன். கோர்ட் நடைமுறைகள் முடியும்வரை இங்கேயே இருந்து ஹரிகிருஷ்ணனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க உள்ளேன் என்றார். இதனிடையே பாதிக்கப்பட்ட பிற பெண்களை போலீசார் தொடர்பு கொண்டபோது, தாங்கள் பாதிக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டனராம்.

வரதட்சணை புகாரும்
கணவனை ஆதாரத்தோடு மாட்டி வைத்த கலா, ஹைதராபாத் காவல் நிலையத்தில், ஹரிகிருஷ்ணனுக்கு எதிராக வரதட்சணை கொடுமை புகாரையும் பதிவு செய்துள்ளார். இதனால் சட்டத்தின் பிடிகளில் சிக்கி திணறிவருகிறார் ஹரிகிருஷ்ணன். சபாஷ்.. கலா போன்ற பெண்கள் உருவாகுவதே காமுகர்களை ஒழிக்கும் வழியாகும். (குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரிகிருஷ்ணன் தவிர்த்த பிற பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications