ராக்கி கயிறு வாங்க கணவர் பணம் தரலையே... விரக்தியில் இளம்பெண் தற்கொலை
ரக்ஷாபந்தன் தினத்தையொட்டி ராக்கி கயிறு வாங்க கணவர் 10 ரூபாய் கொடுக்காததால் விரக்தி அடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர்: ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, ராக்கி கயிறு வாங்க கணவர் பணம் கொடுக்காததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சகோதர பாசத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி திங்கள்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி, பெண்கள் தங்கள் சகோதரர்களின் மீது உள்ள பாசத்தை வெளிக்கொரும் வகையில் அவர்களது கையில் ராக்கி கட்டுவர். இதற்காக சகோதரர்களும் தங்களால் இயன்ற பரிசு பொருள்களை அவர்களுக்கு வாங்கித் தருவர்.

காதல் திருமணம்
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் சகாபுராவை சேர்ந்தவர் அசோக். இவருடைய மனைவி மகாதேவி (23). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அசோக்கிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

அடிக்கடி தகராறு
அடிக்கடி மது குடித்துவிட்டு மகாதேவியிடம் சண்டை போடுவார் அசோக். ரக்ஷாபந்தன் தினமான திங்கள்கிழமை அன்று தனது சகோதரருக்கு ராக்கி கயிறு கட்டவேண்டும் கட்ட அதற்கு ரூ.10 வேண்டும் என்று அசோக்கிடம் கேட்டார் மகாதேவி.

பணம் கொடுக்க மறுப்பு
ஆனால் அசோக்கோ அவருக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த மகாதேவி, அசோக் வெளியே சென்றவுடன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சகாபுரா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மகாதேவியின் உடலை கைப்பற்றினர். ராக்கி கயிறு வாங்க கணவர் ரூ.10 கொடுக்காததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications