விளையாட்டு காரில் தலைமுடி சிக்கி இளம்பெண் மரணம்.. கணவன் கண் முன்பே நடந்த கொடூரம்
ஹரியானாவில் உள்ள பார்க் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் தலைமுடி விளையாட்டு காரில் சிக்கி மரணம் அடைந்து இருக்கிறார்.
Recommended Video

சண்டிகர்: ஹரியானாவில் உள்ள பார்க் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் தலைமுடி விளையாட்டு காரில் சிக்கி மரணம் அடைந்து இருக்கிறார். மரணமடைந்த புனித் கவுர் என்ற பெண்ணின் வயது வெறும் 28 ஆகும்.
இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்று பார்க் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசில் வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது.
இந்தச் சம்பவம் அந்தப் பெண்ணின் கணவன் கண் முன்னே நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவன் அமர்தீப் சிங் இதுகுறித்து விளக்கி இருக்கிறார்.

கொண்டாட்டம்
புனித் கவுர் தன் கணவர் அமர்தீப் சிங் மற்றும் ஒரு மகன், மாமியாருடன் டெல்லியில் இருந்து ஹரியானா சென்றுள்ளார். அங்குச் சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார்கள். அப்போது பிஞ்சுர் கார்ட்னஸ் என்ற பகுதியில் இருக்கும் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளனர்.
|
என்ன நடந்தது
அங்கு விளையாடுவதற்காக இருக்கும் பேட்டரி காரில் எறியுள்ளனர். கணவன் மனைவி ஒரு காரிலும், மகன், பாட்டி இன்னொரு காரிலும் சென்றுள்ளனர். அதில் முதல் சுற்று முடிக்கும் போது புனித் கவுர் மிகவும் சத்தமாகக் கத்தி இருக்கிறார். அருகில் இருந்த கணவனுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

மொத்தமாக வந்தது
கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண்ணின் முடி மொத்தமாக உரிந்து வந்துள்ளது. தலையில் தோலும் உரிந்துள்ளது. பின்புதான் டயரில் முடி மாட்டியது கண்டுபிடிக்கப்ட்டது. அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மரணம்
ஆனால் சிகிச்சை பலன் இன்றி அந்தப் பெண் மரணம் அடைந்தார். காரின் பின் டயரில் முடி சிக்கி அவர் மரணம் அடைந்துள்ளார். தற்போது அந்த பார்க் நிர்வாகிகள் மீது கணவன் வழக்குத் தொடுத்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications