ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 76 வது இடம்!
டெல்லி: ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 76வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது.
2015 - ம் ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்கு 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

டென்மார்க்கில் ஊழலே இல்லீங்க
இதில் 2014-ம் ஆண்டைப் போலவே ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்தை பெற்றது. பின்லாந்துக்கு 2-வது இடமும், சுவீடனுக்கு 3 - வது இடமும் கிடைத்தன.

ஊழல் மலிந்தவை
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும், ஆசியா நாடான வடகொரியாவும் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்தன.

இந்தியாவுக்கு 76- வது இடம்
இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 76 - வது இடம் கிடைத்து உள்ளது. 2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா 9 இடங்கள் முன்னேறி இருக்கிறது. 2014-ல் இருந்ததைவிட இந்தியாவில் 2015-ல் ஊழல் சற்று குறைந்து காணப்படுகிறது. எனினும், இதில் இந்தியா பெற்றுள்ள மொத்த மதிப்பு 2014-ம் ஆண்டைப் போலவே 100-க்கு 38 ஆக இருக்கிறது.

அட பூடானைப் பாருங்க...
இந்தியாவின் அண்டை நாடான பூடான் ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் 27-வது இடம் வகிக்கிறது. இந்த நாடு 100-க்கு 65 மதிப்பை பெற்று இருக்கிறது.

சீனாவிலும்
அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவுக்கு ஊழல் பட்டியலில் 83-வது இடமும், வங்காளதேசத்துக்கு 139-வது இடமும் கிடைத்தது.

இந்தியைவைச் சுற்றிலும் ஊழல்தான்
பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் 2014-ம் ஆண்டு இருந்ததைவிட ஊழல் மலிந்து காணப்படுகிறது. இதனால் இந்த நாடுகள் ஊழல் தரவரிசை பட்டியலில் தங்களது இடங்களை சற்று உயர்த்திக் கொண்டு உள்ளன.

நடவடிக்கை இல்லை
இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகையில், "ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கையைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தலைவர்கள் அறிவித்த எதிர்பார்ப்புகள் அவ்வளவாக நிறைவேறவில்லை.

திணறல்
வங்காளதேசம், கம்போடியா ஆகிய 2 நாடுகளும் ஊழலால் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகின. ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் ஊழலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஊழலுக்கு எதிராக சீனா எடுத்து வரும் நடவடிக்கைகளால் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.

53 நாடுகள்
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015-ல் 64 நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளன. 53 நாடுகள் இதில் பின்தங்கின. மற்ற நாடுகளின் நிலையில் ஏற்ற, இறக்கம் எதுவும் இல்லை," என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications