மீண்டும் ஜாமீன் கட்ட மறுப்பு- யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேலும் 12 நாள் ஜெயில்!
ஹஜரிபாக்: ஜார்க்கண்ட் மாநில மின்வாரிய அதிகாரியைத் தாக்கிய வழக்கில் மீண்டும் ஜாமீன் தொகை கட்ட மறுத்ததால் பாரதிய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேலும் 12 நாள் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜரிபாக் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி,யானவர் யஷ்வந்த்சின்ஹா. தற்போது நடைபெற்ற தேர்தலில் அவரது மகன் போட்டியிட்டு வென்றார்.
அங்கு கடுமையான மின்வெட்டு அமலில் இருந்துள்ளது. இதைக் கண்டித்து கடந்த ஜூன் 3-ந் தேதியன்று பாஜக தொண்டர்களுடன் மின்சார வாரிய அலுவலகம் முன்பு யஷ்வந்த் சின்ஹா போராட்டம் நடத்தினார்.

அப்போராட்டத்தின் போது மின்வாரிய அதிகாரியை பாஜகவினர் கட்டிப் போட்டனர். பின்னர் போலீசார் வந்து அவரை விடுவித்தனர். அதே நேரத்தில் கூடியிருந்த செய்தியாளர்களிடம், தாம்தான் அதிகாரியை கட்டிப் போட்டதாக சின்ஹா கூறினார்.
இதைத் தொடர்ந்து அரசு அதிகாரியை தாக்கியது, பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளில் யஷ்வந்த் சின்ஹா மற்றும் பாஜகவினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது தாம் ஜாமீன் தொகை கட்ட முடியாது என்று யஷ்வந்த் சின்ஹா கூறியதால் அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் ஹஜரிபாக் சிறையில் இருந்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் சிறையில் உட்கார்ந்திருந்த நாற்காலி உடைந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போதும் தாம் ஜாமீன் தொகை கட்ட முடியாது என்று சின்ஹா கூறிவிட்டார். இதனால் அவரை மேலும் 12 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது.
அத்வானி..
இதனிடையே சிறையில் உள்ள யஷ்வந்த் சின்ஹாவை பாஜக மூத்த தலைவர் அத்வானி நாளை நேரில் சென்று சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின் போது ஜாமீன் தொகை கட்டி வெளியே வருமாறு சின்ஹாவை அத்வானி கேட்டுக் கொள்ளக் கூடும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications