எடியூரப்பா சிறந்த பணியை செய்துள்ளார்.. பாராட்டிய ஜேபி நட்டா.. கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்
கோவா : கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படலாம் என்ற பேச்சுக்களுக்கு மத்தியில், பாஜக தலைவர் ஜே பி நட்டா கூறிய பதில் கர்நாடகா அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படக்கூடும் என்ற கருத்தை நிராகரித்தார். முதல்வர் பி எஸ் எடியுரப்பா நன்றாக வேலை செய்துள்ளார் என்று கூறினார்.
இரண்டு நாள் பயணமாக கோவாவிற்கு சென்றிருந்தார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா. அங்குள்ள பனாஜி நகரில் கட்சி நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நட்டாவிடம் கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருந்து விலகிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவாரா என்று கேட்கப்பட்டது.

நெருக்கடியே இல்லை
அதற்கு ஜேபி நட்டா, "எடியூரப்பா சிறந்த பணியை செய்துள்ளார். கர்நாடகா சிறப்பாக செயல்படுகிறது. தனது பாணியில் மாநிலத்தை எடியூரப்பா வழிநடத்துகிறார்," என்றார் மேலும் கர்நாடாக மாநிலத்தில் தலைமை பதவிக்கு நெருக்கடி என்று நினைப்பது நீங்கள் தான். நாங்கள் அல்ல," என்றும் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

எடியூரப்பா பேட்டி
முன்னதாக முதல்வர் பதவியில் தொடர்வதா வேண்டாமா என்பதை பாஜக மேலிடத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப முடிவு செய்வேன் என்று கடந்த ஜூலை 25ம் தேதி எடியூரப்பா கூறியிருந்தார். எனவே அப்படிப்பட்ட சூழலில் ஜேபி நட்டாவின் இன்றை கருத்து கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

விதிவிலக்கு
இதன் மூலம் எடியூரப்பா கர்நாடகா முதல்வர் பதவியில் தொடருவார் என்று தெரிய வருகிறது. எனினும் கர்நாடகா அரசியலில் என்ன நடக்கும் என்பதை குறித்து உறுதியாக தகவல்கள் இல்லை. பாஜகவை பொறுத்தவரை 75வயதிற்கு மேல் பதவிகளை தொடரவது இல்லை. அந்த விதியை கடைபிடித்து வருகிறது. விதி விலக்காகவே 78-79 வயது வரை பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார் எடியூரப்பா.

லிங்காயத் மடாதிபர்கள் எச்சரிக்கை
அதற்காக எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோதி, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்தார். இதேபோல் டெல்லி தலைமை அறிவுறுத்தினால் முதல்வர் பதவியை விட்டு விலகுவதாக எடியூரப்பா சொன்னதுபோல், இதுவரையிலும் யாரும் சொன்னதும் இல்லை. என்ன நடக்கும் என்பதே புரியாத புதிராக உள்ளது. எடியூரப்பாவை மாற்றுவது சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள் லிங்காயத் சமுதாய மடாதிபதிகள். லிங்காயத் சமூகம் தான் கர்நாடகாவில் அதிக அளவில் வாக்கு வங்கி உள்ள சமூகம் ஆகும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications