56 அங்குலம் மார்பளவு கொண்டவர் மோடி.. நான் எவ்வாறு அறைய முடியும்?... மம்தா கேட்கிறார்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: 56 அங்குலம் மார்பளவு கொண்ட பிரதமர் மோடியை நான் எவ்வாறு அறைய முடியும்? என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கான 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 118 தொகுதிகளுக்கு இன்னும் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில், 59 தொகுதிகளில், 6 வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் மே 12ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஜனநாயகத்தால் அறைவேன்

ஜனநாயகத்தால் அறைவேன்

இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலம் பசிர்ஹாத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை நான் அறைவேன் என்று கூறவில்லை என்றும் ஜனநாயகத்தால் அறைவேன் என்று தான் கூறினேன் எனவும் விளக்கமளித்தார்.

கை உடைந்துவிடும்

கை உடைந்துவிடும்

மேலும், நான் ஏன் பிரதமரை அறையப்போகிறேன்; அவரை அறைந்தால் எனது கை உடைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
56 அங்குலம் மார்பளவு கொண்ட பிரதமர் மோடியை நான் எவ்வாறு அறைய முடியும்? என்றும் மம்தா பானர்ஜி கேட்டுள்ளார். அறைவோ அல்லது தொடவோ எனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்

ஆசீர்வாதமாக எண்ணுவேன்

ஆசீர்வாதமாக எண்ணுவேன்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "ஜனநாயகத்தின் வழியாக பிரதமர் மோடியை ஓங்கி அறைய வேண்டும்" என்று பேசினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மோடி, "மம்தாவிடமிருந்து அறை வாங்கினால் கூட, அதை ஆசீர்வாதமாகத்தான் எண்ணுவேன்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

வார்த்தை போர்

வார்த்தை போர்

பிரதமர் வேட்பாளர் ரேசில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பெயரும் பேசப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால், தேசிய அளவிலான அரசியலில், மோடிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.

பதிலளிப்பார்

பதிலளிப்பார்

காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு பிரச்சார கூட்டங்களில் பதிலளித்து வரும் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கும் பதிலளிப்பார் என கூறப்படுகிறது. ஜாதி பிரச்சனையில், "நான் ஏழை ஜாதி" என்று காங்கிரஸ் கட்சிக்கு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+